நான்கு லட்சம்  வேலைவாய்ப்புகள்நான்கு லட்சம் வேலைவாய்ப்புகள் ...  ‘இ – வே’ பில்: இந்திய தொழிலக கூட்டமைப்பு வரவேற்பு ‘இ – வே’ பில்: இந்திய தொழிலக கூட்டமைப்பு வரவேற்பு ...
எலக்ட்­ரா­னிக் பொருட்­கள் இறக்­கு­மதி குறைந்­தது உள்­நாட்டு உற்­பத்தி அதி­க­ரித்­தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2018
00:11

புது­டில்லி:எலக்ட்­ரா­னிக் பொருட்­கள் உற்­பத்தி மூன்று ஆண்­டு­க­ளாக அதி­க­ரித்­ததை அடுத்து, அதன் இறக்­கு­மதி வளர்ச்சி விகி­தம் சரி­வ­டைந்­துள்­ளது.
முந்­தைய, ஐ.மு., கூட்­டணி அரசு, எலக்ட்­ரா­னிக் பொருட்­கள் உற்­பத்­தியை ஊக்­கு­விக்க, 2012ல், தேசிய மின்­னணு கொள்­கையை அறி­வித்­தது. இதன் மூலம், எலக்ட்­ரா­னிக் பொருட்­கள் தயா­ரிப்­பில் ஈடு­படும் நிறு­வ­னங்­க­ளுக்கு பல்­வேறு சலு­கை­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன.ஆய்வு மற்­றும் மேம்­பாட்டு நட­வ­டிக்­கை­க­ளுக்கு அரசு மானி­யம், ஏற்­று­ம­திக்கு வரிச் சலு­கை­கள் ஆகி­ய­வை­யும், மின்­னணு சாத­னங்­கள் துறை­யின் வளர்ச்­சிக்கு உத­வு­கின்­றன.
இதன் கார­ண­மாக, மூன்று ஆண்­டு­களில், எலக்ட்­ரா­னிக் பொருட்­கள் உற்­பத்தி, குறிப்­பி­டத்­தக்க வகை­யில் அதி­க­ரித்­து உள்­ளது.
இது குறித்து, மத்­திய மின்­னணு மற்­றும் தக­வல் தொழில்­நுட்ப துறை அமைச்­சர், கே.ஜே.அல்­போன்ஸ், ராஜ்­ய­ச­பா­வில் கூறி­ய­தா­வது:தேசிய மின்­னணு கொள்­கை­யால், உள்­நாட்­டில் எலக்ட்­ரா­னிக் சாத­னங்­கள் தயா­ரிப்பு அதி­க­ரித்­து உள்­ளது. ‘ஆப்­பிள், சாம்­சங், நோக்­கியா, எல்.ஜி., எச்.டி.சி., லாவா, இன்­டெக்ஸ்’ உள்­ளிட்ட மொபைல் போன் தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள், இங்கு தொழிற்­சா­லை­களை அமைத்­து உள்­ளன.
கணினி மற்­றும் அது சார்ந்த உப­க­ர­ணங்­கள் தயா­ரிப்­பில், ‘எச்.பி., லெனோவா, டெல், சிஸ்கோ’ உட்­பட, பல நிறு­வ­னங்­கள் ஈடு­பட்­டு உள்­ளன.இதன் கார­ண­மாக, உள்­நாட்­டில், எலக்ட்­ரா­னிக் பொருட்­க­ளுக்­கான தேவையை சமா­ளிக்க முடி­யா­மல் இருந்த நிலை மாறி வரு­கிறது. எலக்ட்­ரா­னிக் பொருட்­கள் உற்­பத்தி அதி­க­ரிப்­பால், இது சாத்­தி­ய­மா­கி­யுள்­ளது.
கடந்த, 2013 -– 14ம் நிதி­யாண்­டில், உள்­நாட்டு எலக்ட்­ரா­னிக் பொருட்­க­ளின் உற்­பத்தி, மதிப்பு அடிப்­ப­டை­யில், 1.80 லட்­சம் கோடி ரூபா­யாக இருந்­தது. இது, 2016- – 17ல், 3.17 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. இந்த மூன்று ஆண்­டு­களில், எலக்ட்­ரா­னிக் பொருட்­கள் உற்­பத்தி வளர்ச்சி, முறையே, 5.49 சத­வீ­தம்; 27.79 சத­வீ­தம் மற்­றும், 30.45 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது.
உள்­நாட்­டில் எலக்ட்­ரா­னிக் பொருட்­கள் உற்­பத்தி அதி­க­ரித்த கார­ணத்­தால், அவற்­றின் இறக்­கு­மதி வளர்ச்சி விகி­தம் குறைந்­துள்­ளது.மதிப்­பீட்டு ஆண்­டு­களில், எலக்ட்­ரா­னிக் பொருட்­கள் இறக்­கு­மதி வளர்ச்சி, 12.94 சத­வீ­தம்; 9.06 சத­வீ­தம் மற்­றும் 4.74 சத­வீ­தம் என்ற வகை­யில் குறைந்­துள்­ளது.
அதே­ச­ம­யம், இதே காலத்­தில், இறக்­கு­ம­தி­யான மின்­னணு பொருட்­க­ளின் மதிப்பு, 2.16 லட்­சம் கோடி ரூபா­யில் இருந்து, 2.78 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.மின்­னணு பொருட்­கள் தயா­ரிப்பு துறையை ஊக்­கு­விக்க, பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மத்­திய அரசு எடுத்து வரு­கிறது.இவ்­வாறு அவர் கூறி­னார்.
ஏற்றுமதி உயர்ந்தது
நாட்­டின் எலக்ட்­ரா­னிக் பொருட்­கள் ஏற்­று­மதி, ஆண்­டுக்­காண்டு அதி­க­ரித்து வரு­கிறது. கடந்த, 2015 -– 16ம் நிதி­யாண்­டில், எலக்ட்­ரா­னிக் பொருட்­கள் ஏற்­று­மதி, 38 ஆயி­ரத்து, 737 கோடி ரூபா­யாக இருந்­தது. இது, 2016 -– 17ல், 0.06 சத­வீ­தம் வளர்ச்சி கண்டு, 38 ஆயி­ரத்து, 759 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. கடந்த மார்ச்­சு­டன் முடிந்த, 2017- – 18ம் நிதி­யாண்­டில், ஏற்­று­மதி மேலும் அதி­க­ரித்­தி­ருக்­கும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)