எலக்ட்­ரா­னிக் பொருட்­கள் இறக்­கு­மதி குறைந்­தது   உள்­நாட்டு உற்­பத்தி அதி­க­ரித்­தது எலக்ட்­ரா­னிக் பொருட்­கள் இறக்­கு­மதி குறைந்­தது உள்­நாட்டு உற்­பத்தி ... ... உங்கள் ஷாப்பிங் செல­வு­களை  கட்­டுப்­ப­டுத்­து­வது எப்­படி? உங்கள் ஷாப்பிங் செல­வு­களை கட்­டுப்­ப­டுத்­து­வது எப்­படி? ...
‘இ – வே’ பில்: இந்திய தொழிலக கூட்டமைப்பு வரவேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2018
00:13

புதுடில்லி:‘சரக்கு போக்­கு­வ­ரத்­திற்­கான, ‘இ – வே’ பில் நடை­முறை, தொழில் புரி­வதை மேலும் சுல­ப­மாக்­கி­யுள்­ளது’ என, இந்­திய தொழி­லக கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.
வணிக நிறு­வ­னங்­கள் அனுப்­பும், 50 ஆயி­ரம் ரூபாய் மதிப்­பிற்கு மேற்­பட்ட சரக்­கு­க­ளுக்கு, ‘இ – வே’ பில் எனப்­படும் மின் வழிச் சீட்டு அவ­சி­ய­மா­கும். சரக்கு கொண்டு செல்­லும்­போது, வரி அதி­கா­ரி­கள் ஆய்வு செய்­தால், இந்த சீட்டை காட்ட வேண்­டும். வரி ஏய்ப்பை தடுக்­கும் இத்­திட்­டம், ஏப்., 1ல் அம­லுக்கு வந்­தது. மூன்று நாட்­களில், 17 லட்­சம் மின் வழிச் சீட்­டு­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.
ஜூன் 1 முதல், மாநி­லத்­திற்­குள் நடை­பெ­றும் சரக்கு போக்­கு­வ­ரத்­துக்கு, மின் வழிச் சீட்டு நடை­முறை, அம­லுக்கு வர உள்­ளது.
இது குறித்து, இந்­தியதொழி­லக கூட்­ட­மைப்பு வெளி­யிட்­டுள்ள அறிக்கை:மாநி­லங்­கள் இடையே, எவ்­வித இடை­யூ­றும் இன்றி, விரை­வாக சரக்கு போக்­கு­வ­ரத்து மேற்­கொள்ள, மின் வழிச் சீட்டு வழி­கோ­லி­யுள்­ளது.சரக்கு வாக­னங்­கள், சுங்­கச் சாவ­டி­களில், வரி அதி­கா­ரி­க­ளின் ஆய்­வுக்­கும், அனு­ம­திக்­கும் பல மணி நேரம் காத்­தி­ருக்­கும் பிரச்­னைக்கு, மின் வழிச் சீட்டு முடிவு கட்­டி­யுள்­ளது.
இத­னால், மாநி­லங்­க­ளுக்கு இடையே, சரக்­கு­களை விரை­வாக கொண்டு செல்ல முடி­கிறது. இதன் மூலம், சரக்கு போக்­கு­வ­ரத்து செல­வும் குறைந்­துள்­ளது. மின் வழிச் சீட்டு, தொழில் புரி­வதை மேலும் சுல­ப­மாக்­கும், ஒரு மைல் கல் திட்­டம் என­லாம்.வரி விலக்கு சரக்­கை­யும்,வரி விதிப்பு சரக்­கை­யும், ஒருங்கே கொண்டு செல்­லும்­போது, வரி விதிப்பு சரக்­கிற்கு மட்­டும், மின் வழிச் சீட்டு தேவை என, புதிய விதி­முறை கூறு­கிறது.
இது, அனைத்து தொழில்­க­ளுக்­கும், குறிப்­பாக, அதிக அள­வில் கையா­ளும் நுகர்­பொ­ருள் நிறு­வ­னங்­க­ளுக்கு மிக­வும் பய­னுள்­ள­தாக இருக்­கும்.மின் வழிச் சீட்டு, அதி­க­மா­னோரை வரி வரம்­பிற்­குள் கொண்டு வர துணை புரி­யும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.
கூடுதல் வருவாய்
ஜி.எஸ்.டி.என்., நிறு­வ­னத்­தின் www.ewaybill.nic.in வலை­த­ளம், ஒரு நாளைக்கு, 75 லட்­சம் மின் வழிச் சீட்­டு­களை தயா­ரிக்­கும் திறன் கொண்­டது. ரிவிகோ போன்ற, ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­கள், மொபைல் போன் மூலம், மின் வழிச் சீட்­டு­களை உரு­வாக்­கும் சேவை­யில் ஈடு­பட்­டுள்­ளன.‘கிளி­யர் டேக்ஸ்’ நிறு­வ­னம், தின­மும், சரா­ச­ரி­யாக, ஒரு லட்­சம் மின் வழிச் சீட்­டு­களை உரு­வாக்­கு­கிறது. பல நிறு­வ­னங்­கள், மின் வழிச் சீட்­டு­களை உரு­வாக்கி தரும் சேவை மூலம், கூடு­தல் வரு­வாய் ஈட்­டத் துவங்­கி­யுள்­ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)