பதிவு செய்த நாள்
12 ஏப்2018
00:39
சென்னை:மக்களின் நுகர்வு குறைந்ததால், பழங்களில் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.சென்னை, கோயம்பேடு சந்தையில் இரண்டு நாட்களாக பழங்களின் நுகர்வு குறைந்துள்ளது. இதனால், திராட்சை, சப்போட்டா, கமலா உள்ளிட்ட பழ வகைகளின் விலை குறைந்துள்ளது. 600 – 700 ரூபாய் வரை விற்கப்பட்ட, 10 கிலோ திராட்சை, 400 – 500 வரை குறைந்துள்ளது. சப்போட்டா ஒரு கிலோ, 10 ரூபாய்க்கு வந்துள்ளது. சாத்துக்குடி, 40 ரூபாய்க்கும், கமலா, 60 – 70 ரூபாயாகவும் குறைந்துள்ளது.
காய்கறிகளில் தக்காளி இரண்டு கிலோ, 30 ரூபாயாகவும், வெங்காயம், 3 கிலோ, 50 ரூபாயாகவும் விற்பனையானது. உருளைக்கிழங்கு, 25 – 30 ரூபாயாக உள்ளது. சின்ன வெங்காயம், 30 – 40 ரூபாயாக உள்ளது. சீசன் இன்னும் களைகட்டாததால், மாதவரத்தில் மாம்பழ சந்தை இன்னும் கூடவில்லை. தற்போது, கிளிமூக்கு மாங்காய் வரத்து துவங்கியுள்ளது. இது, 1 கிலோ, 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|