பதிவு செய்த நாள்
12 ஏப்2018
00:42
மும்பை:நடப்பாண்டில், இந்தியாவில் பருத்தி உற்பத்தி, 360 லட்சம் பொதிகளாக இருக்கும் என, இந்திய பருத்திக் கழகம் தெரிவித்துள்ளது.
நடப்பு பருத்தி ஆண்டான அக்., 2017 முதல் செப்., 2018 வரையிலான காலகட்டத்தில், பருத்தி உற்பத்தியானது இதற்கு முன்பு கணித்ததற்கு மாறாக, 2 லட்சம் பொதிகள் குறைந்து, 360 லட்சம் பொதிகளாக இருக்கும் என, பருத்தி கழகம் தெரிவித்துள்ளது.
ஒரு பொதி என்பது, 170 கிலோ கொண்டதாகும். கடந்த மார்ச் மாதத்தில், 362 லட்சம் பொதிகள் உற்பத்தியாகும் என, கணிக்கப்பட்டிருந்தது.மஹாராஷ்ட்ரா மற்றும் கர்நாடகாவில் தலா ஒரு லட்சம் பொதிகள் உற்பத்தி குறைந்தது தான் இதற்கு காரணம்.
உள்நாட்டு தேவை, 324 லட்சம் பொதிகளாகவும், ஏற்றுமதி, 65 லட்சம் பொதிகளாகவும் இருக்கும் என, பருத்திக் கழகம் கணித்து உள்ளது. ஏற்றுமதிக்கான தேவை உயர்ந்துள்ளதால், கடந்த மாத கணிப்பான, 60 லட்சம் பொதிகளை விட, 5 லட்சம் பொதிகள் அதிகரித்து கணிக்கப்பட்டுள்ளது.மார்ச் மாதம், 31ம் தேதி வரையிலான காலகட்டத்தில், 287 பொதிகள் வந்திருக்கும் என கருதுகிறது, இந்திய பருத்திக் கழகம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|