பதிவு செய்த நாள்
24 ஏப்2018
03:34
புதுடில்லி : அடுத்த இரண்டு மாதங்களில், 12 புதிய நிறுவனங்கள் பங்கு வெளியீட்டின் மூலம், 17 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளன.கடந்த, 2017 – 18ம் நிதியாண்டில், பங்கு வெளியீடு வாயிலாக, 84 ஆயிரத்து, ௩௫௭ கோடி ரூபாய் திரட்டப்பட்டது.இந்நிலையில், அடுத்த இரண்டு மாதங்களில், எச்.டி.எப்.சி., அசெட் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட, 12 நிறுவனங்கள், பங்கு வெளியீடு மூலம், 17 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளன.இந்தாண்டின் முதல் காலாண்டில், 14 நிறுவனங்கள், பங்கு வெளியீடு வாயிலாக, 18 ஆயிரத்து, 591 கோடி ரூபாய் திரட்டியுள்ளன.இது, கடந்த ஆண்டு, இதே காலத்தில் திரட்டியதை விட, நான்கு மடங்கு அதிகம்.இது குறித்து, ‘ஜியோஜித் பைனான்ஷியல் சர்வீசஸ்’ நிறுவனத்தின், தலைமை முதலீட்டு ஆலோசகர், கவுரங் ஷா கூறியதாவது:கடந்த நிதியாண்டில், ஒரு சில நிறுவனங்களை தவிர, பெரும்பான்மை நிறுவனங்களின் பங்கு வெளியீடுகள் வெற்றி பெற்றன.நடப்பு நிதியாண்டிலும், பங்கு வெளியீட்டில் களமிறங்க, பல நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. தற்போது, பங்கு வர்த்தகம் நன்கு உள்ளதால், குறுகிய மற்றும் நடுத்தர கால அடிப்படையில், பங்கு வெளியீடுகள் வெற்றிகரமானதாக இருக்கும் எனலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|