பதிவு செய்த நாள்
04 மே2018
00:50
புதுடில்லி:பி.எம்.டபிள்யு., குரூப் இந்தியா நிறுவனம், இந்தியாவில் முதன் முதலாக, 'பி.எம்.டபிள்யு., மினி கன்ட்ரிமேன்' கார் தயாரிப்பை துவக்கியுள்ளது.
இந்நிறுவனத்தின், தலைவர் விக்ரம் பவா, சென்னை அருகே, சிங்கபெருமாள்கோவிலில் உள்ள தொழிற்சாலையில், கார் தயாரிப்பை துவக்கி வைத்து பேசியதாவது:சென்னை தொழிற்சாலையில், இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த, 'மினி கன்ட்ரிமென்' கார் தயாரிக்கப்படுகிறது.இது, இந்தியாவில், பி.எம்.டபிள்யு., வரலாற்றில், புதிய அத்தியாயம். கடந்த ஆண்டு, 'மினி' மாடல் கார் விற்பனை, 17 சதவீதம் உயர்ந்து, 421ஆக அதிகரித்துள்ளது. இந்தாண்டு, விற்பனையை இரு மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
பெட்ரோலில் இயங்கும், 'மினி கன்ட்ரிமேன்', மாடல்களுக்கு, 34.90 லட்சம் ரூபாய் மற்றும், 41.40 லட்சம் ரூபாய் ஆகவும், டீசல் காருக்கு, 37.40 லட்சம் ரூபாய் எனவும், விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவற்றின் விற்பனை, ஜூன் மாதம் துவங்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜெர்மனியைச் சேர்ந்த, பி.எம்.டபிள்யு., நிறுவனத்தின் துணை நிறுவனமாக, பி.எம்.டபிள்யு., குரூப் உள்ளது. இந்நிறுவனம், 'மினி' பிரிவில், ஐந்து மாடல்களில் கார்களை விற்பனை செய்கிறது. இவற்றில், 'மினி கன்ட்ரிமேன்' மட்டும், சென்னையில் தயாரிக்கப்படுகிறது. இதர மாடல்களின் பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, 'அசெம்பிளிங்' செய்து, விற்கப்படுகின்றன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|