பதிவு செய்த நாள்
09 மே2018
03:01
புதுடில்லி:‘‘மருந்து நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு அதிக அளவில் முதலீடு செய்து, ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
அவர், டில்லியில், சர்வதேச மருந்து மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு கண்காட்சியை துவக்கி வைத்து பேசியதாவது:இந்திய மருந்துப் பொருட்களுக்கு, லத்தீன், அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. அதை, இந்திய மருந்து நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
புதிய மருந்துகளின் கண்டுபிடிப்புகளுக்கு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில், அதிக முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.சீனா போன்ற நாடுகளுக்கு, மருந்து ஏற்றுமதியை அதிகரிக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.கடந்த நிதியாண்டில், இந்தியா, 1,700 கோடி டாலர் மதிப்பிலான மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்தது. உலகளவில், ஆரோக்கிய பராமரிப்பிற்கான செலவினம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இந்திய மருந்து நிறுவனங்கள், தரமான மருந்துகளை குறைந்த விலையில் வழங்க வேண்டும். மருந்துகள் விலையை குறைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|