பதிவு செய்த நாள்
09 மே2018
03:17
நாமக்கல்:வெயிலின் தாக்கத்தால், வழக்கத்தை காட்டிலும், கறிக்கோழி எடை, ௧கிலோ வரை குறைந்துஉள்ளது. அதனால், அதன் கொள்முதல் விலை, 101 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் மூலம், தினமும், 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
பண்ணை கொள்முதல் விலை, பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி.,) சார்பில், தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஏப்., 25ல், 79 ரூபாய் என, கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 28ல், 84 ரூபாய்; 30ல், 87 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டது. மே 1ல், 90 ரூபாய்; 7ல், 101 ரூபாய் என, படிப்படியாக அதிகரித்து, கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலை, மேலும், ஐந்து ரூபாய் வரை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், வழக்கத்தை காட்டிலும், கறிக்கோழி எடை குறைந்துஉள்ளது. நாற்பதாவது நாளில், 2.700 கிலோ எடையில் காணப்படும் கறிக்கோழி, தீனி எடுத்துக் கொள்வது குறைவதால், அதன் எடையும், 25 சதவீதம் வரை குறைந்து, 1.700, 1.800 என்ற நிலையில் காணப்படுகிறது.தற்போது, ௧ கிலோ வரை குறைந்துள்ளது. அதனால், விலை உயர்ந்து வருகிறது. மேலும், விடுமுறை என்பதாலும், நுகர்வு அதிகரித்துள்ளது. அதன் காரணமாகவும் கொள்முதல் விலை, 100 ரூபாயை தாண்டியுள்ளது. இந்த விலை, ஜூன் மாதம் வரை நீடிக்கும். அதன் பின், குறைய வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|