கோடை வெயிலால்  கறிக்கோழி எடை குறைவு   கோடை வெயிலால் கறிக்கோழி எடை குறைவு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 அதிகரிப்பு தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 அதிகரிப்பு ...
எம்.எப்., சொத்து மதிப்பு ரூ.23.25 லட்சம் கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2018
03:21

புதுடில்லி:கடந்த ஏப்ரல் நிலவரப்படி, 'எம்.எப்.,' என, சுருக்கமாக அழைக்கப்படும், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 9 சதவீதம் அதிகரித்து, 23.25 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இது, மார்ச்சில், 21.36 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இது குறித்து, மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பான, 'ஆம்பி' வெளியிட்டுள்ள அறிக்கை:மியூச்சுவல் பண்டு முதலீடுகள் குறித்து தீவிரமாக நடைபெற்று வரும் விழிப்புணர்வு பிரசாரம், நல்ல பலனை அளித்து வருகிறது.தனிநபர்களும், நிறுவனங்களும், மியூச்சுவல் பண்டு திட்டங்களில் அதிக அளவில் முதலீடு செய்கின்றனர்.கடந்த ஏப்ரல் மாதம், மியூச்சுவல் பண்டு திட்டங்களில், 1.40 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இது, மார்ச் மாதத்தில், 50 ஆயிரத்து, 752 கோடி ரூபாயாக இருந்தது.இந்த வளர்ச்சிக்கு, பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த முதலீடுகள்;கருவூல பில்கள், 'சர்டிபிகேட் ஆப் டிபாசிட், கமர்சியல் பேப்பர்' உள்ளிட்ட 'லிக்யுட் பண்டு' திட்ட முதலீடுகள் துணை புரிந்துள்ளன.மதிப்பீட்டு மாதத்தில், லிக்யுட் பண்டு திட்டங்களில், 1.16 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த முதலீட்டு திட்டங்களில், 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.'இன்கம் பண்டு' எனப்படும், அரசு கடன்பத்திரங்களில் முதலீடு செய்யும் திட்டங்கள், 5,220 கோடி ரூபாயை ஈர்த்துள்ளன.அதேசமயம், 'கில்ட்' மற்றும் 'கோல்டு இ.டி.எப்.,' திட்டங்களில் இருந்து, முறையே, 436 கோடி ரூபாய் மற்றும், 54 கோடி ரூபாய் திரும்பப் பெறப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


எதை தேர்வு செய்யலாம்?

இந்தியாவில், 42 மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் உள்ளன. இவை, பல்வேறு மியூச்சுவல் பண்டு திட்டங்களின் கீழ், முதலீடுகளை திரட்டுகின்றன. இவ்வாறு திரட்டும் தொகை பங்குகள், கடன் பத்திரங்கள், நிதிச் சந்தை பிரிவுகளில், முதலீடு செய்யப்படுகின்றன.
அவற்றில் இருந்து கிடைக்கும், லாபம் அல்லது இழப்பிற்கு ஏற்ப, முதலீட்டாளர்களுக்கு வருவாய் பகிர்மானம் செய்யப்படுகிறது.

பங்கு மற்றும் பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்கள், அதிக வருவாயை தந்தாலும், அவற்றில் இடர்ப்பாட்டு வாய்ப்புகளும் அதிகம். இத்திட்டங்கள், நீண்ட கால முதலீடுகளுக்கு ஏற்றவை. குறுகிய கால முதலீடுகளுக்கு, கடன் பத்திரங்கள் மற்றும் நிதிச் சந்தை பிரிவுகளை தேர்வு செய்யலாம்.

சுலபமான முதலீடு

ரியல் எஸ்டேட், தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்து வந்தவர்கள், தற்போது, மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்கின்றனர். மொபைல்போன் மூலம், குறைந்தபட்சம், 500 ரூபாய் கூட, முதலீடு செய்யலாம். தவணை வசதியுள்ள, எஸ்.ஐ.பி., பிரிவிற்கு, 
முதலீட்டாளர்களிடம் அதிக வரவேற்பு உள்ளது.ஹர்ஷ் ஜெயின்
குரோ வலைதள நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)