பதிவு செய்த நாள்
09 மே2018
03:21
புதுடில்லி:கடந்த ஏப்ரல் நிலவரப்படி, 'எம்.எப்.,' என, சுருக்கமாக அழைக்கப்படும், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 9 சதவீதம் அதிகரித்து, 23.25 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இது, மார்ச்சில், 21.36 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இது குறித்து, மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பான, 'ஆம்பி' வெளியிட்டுள்ள அறிக்கை:மியூச்சுவல் பண்டு முதலீடுகள் குறித்து தீவிரமாக நடைபெற்று வரும் விழிப்புணர்வு பிரசாரம், நல்ல பலனை அளித்து வருகிறது.தனிநபர்களும், நிறுவனங்களும், மியூச்சுவல் பண்டு திட்டங்களில் அதிக அளவில் முதலீடு செய்கின்றனர்.கடந்த ஏப்ரல் மாதம், மியூச்சுவல் பண்டு திட்டங்களில், 1.40 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இது, மார்ச் மாதத்தில், 50 ஆயிரத்து, 752 கோடி ரூபாயாக இருந்தது.இந்த வளர்ச்சிக்கு, பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த முதலீடுகள்;கருவூல பில்கள், 'சர்டிபிகேட் ஆப் டிபாசிட், கமர்சியல் பேப்பர்' உள்ளிட்ட 'லிக்யுட் பண்டு' திட்ட முதலீடுகள் துணை புரிந்துள்ளன.மதிப்பீட்டு மாதத்தில், லிக்யுட் பண்டு திட்டங்களில், 1.16 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த முதலீட்டு திட்டங்களில், 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.'இன்கம் பண்டு' எனப்படும், அரசு கடன்பத்திரங்களில் முதலீடு செய்யும் திட்டங்கள், 5,220 கோடி ரூபாயை ஈர்த்துள்ளன.அதேசமயம், 'கில்ட்' மற்றும் 'கோல்டு இ.டி.எப்.,' திட்டங்களில் இருந்து, முறையே, 436 கோடி ரூபாய் மற்றும், 54 கோடி ரூபாய் திரும்பப் பெறப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|