பதிவு செய்த நாள்
22 மே2018
00:48
புதுடில்லி : ‘பூஷன் ஸ்டீல்’ நிறுவனம் கைமாறியதால், பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் சுமையில், 35 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது.
வாராக்கடன் தொடர்பாக, பூஷன் ஸ்டீல் உள்ளிட்ட, 12 நிறுவனங்கள் மீது, ரிசர்வ் வங்கி பரிந்துரையின் பேரில், திவால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஏலத்தில், ‘டாடா ஸ்டீல்’ நிறுவனத்தின் துணை நிறுவனமான, பாம்னிபால் ஸ்டீல், பூஷன் ஸ்டீல் நிறுவனத்தின், 72.65 சதவீத பங்குகளை, 36 ஆயிரத்து, 400 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியுள்ளது.
இது குறித்து, மத்திய நிதிச் சேவைகள் துறை செயலர், ராஜிவ் குமார் கூறியதாவது: பூஷன் ஸ்டீல் நிறுவனம் கைமாறியுள்ளதால், பொதுத் துறை வங்கிகளுக்கு, வாராக்கடன் பட்டியலில் இருந்த, 3௫ ஆயிரம் கோடி ரூபாய் திரும்பக் கிடைத்துள்ளது. இதன் மூலம், பொதுத் துறை வங்கிகளின் கடன் சுமை குறைந்துள்ளது. அந்நிறுவனத்திற்கு கடன் வழங்கிய ஒவ்வொரு வங்கிக்கும், குறைந்தபட்சம், 500 கோடி முதல், 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை கிடைக்கும்.
மத்திய அரசின் திவால் சட்டத்தின் மூலம், இது சாத்தியமாகியுள்ளது. வெளிப்படையான கடன் கலாசாரத்திற்கு, வங்கித் துறை மாறி வருவதன் துவக்கம் இது எனலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|