பதிவு செய்த நாள்
19 ஜூன்2018
06:23
சென்னை : சங்கீதா மொபைல்ஸ் நிறுவனம், பெங்களூரை தலைமையிடமாக கொண்டு, 1974-ம் ஆண்டு துவக்கப்பட்டு, இன்று தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக, உ.பி., மற்றும் குஜராத் ஆகிய இடங்களில், 490 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு, இந்நிறுவனத்தின், 44-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக, அதன் நிர்வாக இயக்குனர், சுபாஷ்சந்திரா தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: கிராமபோன் காலத்திலிருந்தே எங்களது நிறுவனம், மக்கள் மனம் கவரும் வகையில் வர்த்தகம் செய்து வருகிறது. எங்களது, 44-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, சிறப்பு சலுகையாக, ஒரு சில பிராண்டுகள் தவிர்த்து, வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து மொபைல் போன்களுக்கும், முதல் முறையாக 100 சதவிகித,’கேஷ்பேக்’ சலுகை வழங்கப்படும். அதாவது, மொபைல் போனின் மதிப்பிற்கு சமமான பணமதிப்பு, ‘சங்கீதா மொபைல்ஸ் ஆப்’ மூலம் எலக்ட்ரானிக் பணமாக கணக்கில் சேர்க்கப்படும். பின்னர், மொபைல் வாங்கும்போது மாதாமாதம் அந்த தொகையிலிருந்து குறிப்பிட்ட சதவீதம் கழித்துக் கொள்ளப்படும். மேலும், ஆண்டு விழா காலங்களில் வாங்கப்படும் அனைத்து மொபைல் போன்களுக்கும் கிட்டத்தட்ட, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் பெறக்கூடிய வாய்ப்பையும் அளிக்க உள்ளோம்.அத்துடன், எங்கள் நிறுவனத்தில் வாங்கப்பட்ட போன்கள், ஒருவேளை ஓராண்டு காலத்துக்குள்ளாக உடைந்துவிடும்பட்சத்தில், பாதி விலையில் அதே மாடல் போனை மீண்டும் புத்தம் புதிதாக வாங்கிக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|