பதிவு செய்த நாள்
19 ஜூன்2018
06:25
புதுடில்லி : ‘‘நடப்பு நிதியாண்டில், நாட்டின் நிதிப் பற்றாக்குறை, 3.3 சதவீதம் என்ற அளவில், நிர்ணயித்த இலக்கிற்குள் இருக்கும்,’’ என, மத்திய நிதியமைச்சராக தற்காலிக பொறுப்பில் உள்ள, பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் பேசியதாவது: நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டில், நிதிப் பற்றாக்குறை இலக்கு, 3.3 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதிப் பற்றாக்குறை, 5.91 லட்சம் கோடி ரூபாய் அல்லது பட்ஜெட் மதிப்பீட்டில், 99.5 சதவீதம் ஆகும். பார்லி., தேர்தல் நடைபெறும் ஆண்டாக உள்ள போதிலும், நிதிப் பற்றாக்குறை, நிர்ணயித்த இலக்கிற்குள் கொண்டு வரப்படும். அதுபோல, மத்திய அரசு நிர்ணயித்துள்ள, அனைத்து பொருளாதார அளவுகளும் எட்டப்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஸ்திரத்தன்மை பராமரிக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கடந்த பிப்ரவரியில், மத்திய பட்ஜெட் தாக்கலின் போது, ‘2017 – -18ம் நிதியாண்டிற்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு, மறுமதிப்பீட்டின்படி, 3.2 சதவீதத்தில் இருந்து, 3.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது’ என, தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|