பதிவு செய்த நாள்
25 ஜூன்2018
06:16
வர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க தள்ளுபடி சலுகைகளை முக்கிய உத்தியாக பயன்படுத்துகின்றன. விழாக்காலம் போன்றவற்றில் இந்த உத்திகள் கூடுதலாக பின்பற்றப்படுகின்றன. எனினும் தள்ளுபடியை பார்த்த உடன் பொருட்களை வாங்காமல், நுகர்வோர் என்ற முறையில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். தள்ளுபடி தொடர்பாக பொதுவாக அறிய வேண்டியவை:
ஒரிஜினல் விலை என்ன?
வாடிக்கையாளர்கள் ஒரு பொருளின் மதிப்பை அதன் மூல விலை மற்றும் பட்டியல் விலையை வைத்தே கணக்கிடுகின்றனர். பல நேரங்களில், மூல விலை உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் சலுகை விலை அறிவிக்கப்படுவதையும் அறிய வேண்டும். 50 சதவீத தள்ளுபடி என்பது ஈர்க்கலாம். ஆனால், அதுவே உண்மை விலையாக இருக்கலாம்.
இரட்டை தள்ளுபடி உத்தி :
தள்ளுபடி உத்திகள் பெரும்பாலும் உளவியல் அடிப்படையில் செயல்படுகின்றன. இரட்டை தள்ளுபடி சலுகை இதற்கு உதாரணம். மொத்தமாக 40 சதவீதம் தள்ளுபடி அளிக்கும் பொருளை விட 20 சதவீத தள்ளுபடி மற்றும் கூடுதலாக 25 சதவீத தள்ளுபடியை வாடிக்கையாளர்கள் ஈர்ப்பு மிக்கதாக கருதுகின்றனர்.
இலவச ஈர்ப்பு :
வாடிக்கையாளர்கள் மலிவு விலையை விட இலவசத்தை கூடுதல் ஈர்ப்பு மிக்கதாக கருதுவதை நிறுவனங்கள் அறிந்து வைத்துள்ளன. எனவே, வாடிக்கையாளர்கள் 33 சதவீத விலை குறைப்பை விட, 50 சதவீத பொருள் இலவசம் என்பதை அதிக மதிப்புள்ளதாக கருதுகின்றனர். வாடிக்கையாளர்கள் பின்னங்களை புரிந்து கொள்வதில் பலவீனமாக இருக்கின்றனர்.
இதுவா? அதுவா?
பெரும்பாலும் ஒப்பீடு நோக்கிலேயே வாடிக்கையாளர்களை பொருட்களை தேர்வு செய்ய வைக்கும் உத்தி கடைபிடிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு 3,999 ரூபாய் விலை உள்ள ஷு அருகே 1,999 ரூபாய் விலை கொண்ட ஷூ வைக்கப்பட்டு இருந்தால், இரண்டாவது ஷூவை பலரும் தேர்வு செய் கின்றனர். முதல் ஷுவை விட இது மலிவாகத் தோன்றுகிறது.
பார்த்ததும் வாங்குவது :
தள்ளுபடி அறிவிப்புகள், உடனே வாங்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தலாம். இந்த உணர்வை தான் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. எனவே, பார்த்ததும் வாங்குவதை விட, தேவையான பொருள் தள்ளுபடியில் கிடைத்தால் வாங்குவதே சரியாக இருக்கும். வாங்குவதற்கு, முன் உண்மையான பலன் என்ன என, கேட்டுக் கொள்ள வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|