பதிவு செய்த நாள்
25 ஜூன்2018
06:18
மியூச்சுவல் பண்ட் திட்டங்களை மறு வகைப்படுத்துவது தொடர்பாக பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி வெளியிட்ட நெறிமுறைகளை அடுத்து பண்ட் நிறுவனங்கள் நியூ பண்ட் ஆபர்களை வெளியிட்டு வருகின்றன.
மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் போது முதல் முறையாக திட்டத்தில் இணைவதற்காக வெளியிடும் வாய்ப்பு நியூ பண்ட் ஆபர் (என்.எப்.ஓ)எனப்படுகிறது. பங்குச்சந்தையில் நுழையும் நிறுவனங்கள் முதல் முறை பங்குகளை வெளியிடும் ஐ.பி.ஓ போன்றது இது. ஒபன் எண்ட் மற்றும் குளோஸ்ட் எண்ட் ஆகிய இரு வகையான பண்ட் களுக்கும் இது பொருந்தும்.
செபி நெறிமுறைகளை பின்பற்றி வரும் சூழலில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் மறுவகைப்படுத்தலுக்கு பின் தங்கள் வசம், குறிப்பிட்ட வகை திட்டங்கள் இல்லாமல் இருந்தால் அதை போக்கும் வகையில் அந்த பிரிவில் என்.எப்.ஒ வெளியிட தயாராகி வருகின்றன. எனினும், தங்கள் முதலீடு வாய்ப்பில் நிதி இலக்கிற்கு ஏற்ப குறிப்பிட்ட வகை திட்டம் இல்லாமல் இருந்து, அந்த பிரிவில் புதிய திட்டம் அமைந்திருந்தால் மட்டுமே முதலீட்டாளர்கள் என்.எப்.ஓ வாய்ப்புகளை பரிசீலிக்க வேண்டும் என வல்லுனர்கள் கருதுகின்றனர்.
பொதுவாக மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் என்.ஏ.வி எனப்படும் அவற்றுக்கான நிகர சொத்து மதிப்பு அடிப்படையிலேயே வாங்கப்படுகின்றன. ஆனால், ஏற்கனவே உள்ள திட்டத்திற்கான என்.ஏ.வி அதிகமாக இருக்க கூடிய சூழலில், என்.எப்.ஓ வாய்ப்பின் போது, என்.ஏ.வி 10 ரூபாயாக இருப்பது ஒரு சாதகமாக பார்க்கப்படுகிறது. எனினும், இதை மட்டுமே முதலீட்டிற்கான அம்சமாக கருதாமல் மற்ற அம்சங்களையும் கருத வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|