மின்னணு வணிகத்தில் களமிறங்கும், ‘கூகுள்’ : முதன் முதலாக இந்தியாவில் துவக்க திட்டம் மின்னணு வணிகத்தில் களமிறங்கும், ‘கூகுள்’ : முதன் முதலாக இந்தியாவில் ... ... நஷ்­டத்தை நிறுத்­திக் கொள்­ளும் சாமர்த்­தி­யம் நஷ்­டத்தை நிறுத்­திக் கொள்­ளும் சாமர்த்­தி­யம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நியூ பண்ட் ஆபர் என்றால் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2018
06:18

மியூச்சுவல் பண்ட் திட்டங்களை மறு வகைப்படுத்துவது தொடர்பாக பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி வெளியிட்ட நெறிமுறைகளை அடுத்து பண்ட் நிறுவனங்கள் நியூ பண்ட் ஆபர்களை வெளியிட்டு வருகின்றன.

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் போது முதல் முறையாக திட்டத்தில் இணைவதற்காக வெளியிடும் வாய்ப்பு நியூ பண்ட் ஆபர் (என்.எப்.ஓ)எனப்படுகிறது. பங்குச்சந்தையில் நுழையும் நிறுவனங்கள் முதல் முறை பங்குகளை வெளியிடும் ஐ.பி.ஓ போன்றது இது. ஒபன் எண்ட் மற்றும் குளோஸ்ட் எண்ட் ஆகிய இரு வகையான பண்ட் களுக்கும் இது பொருந்தும்.

செபி நெறிமுறைகளை பின்பற்றி வரும் சூழலில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் மறுவகைப்படுத்தலுக்கு பின் தங்கள் வசம், குறிப்பிட்ட வகை திட்டங்கள் இல்லாமல் இருந்தால் அதை போக்கும் வகையில் அந்த பிரிவில் என்.எப்.ஒ வெளியிட தயாராகி வருகின்றன. எனினும், தங்கள் முதலீடு வாய்ப்பில் நிதி இலக்கிற்கு ஏற்ப குறிப்பிட்ட வகை திட்டம் இல்லாமல் இருந்து, அந்த பிரிவில் புதிய திட்டம் அமைந்திருந்தால் மட்டுமே முதலீட்டாளர்கள் என்.எப்.ஓ வாய்ப்புகளை பரிசீலிக்க வேண்டும் என வல்லுனர்கள் கருதுகின்றனர்.

பொதுவாக மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் என்.ஏ.வி எனப்படும் அவற்றுக்கான நிகர சொத்து மதிப்பு அடிப்படையிலேயே வாங்கப்படுகின்றன. ஆனால், ஏற்கனவே உள்ள திட்டத்திற்கான என்.ஏ.வி அதிகமாக இருக்க கூடிய சூழலில், என்.எப்.ஓ வாய்ப்பின் போது, என்.ஏ.வி 10 ரூபாயாக இருப்பது ஒரு சாதகமாக பார்க்கப்படுகிறது. எனினும், இதை மட்டுமே முதலீட்டிற்கான அம்சமாக கருதாமல் மற்ற அம்சங்களையும் கருத வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)