பதிவு செய்த நாள்
25 ஜூன்2018
06:25
தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி, கடந்த வாரம் பெரிய மாற்றமில்லாமல், 130 புள்ளிகளுடன் ஏற்ற, இறக்கம் கண்டு, 10,821 என்ற நிலையில் வர்த்தகம் முடிவுற்றது. கடந்த நான்கு வாரங்களாக சிறிய அளவில் உயரம் கண்டு, 500 புள்ளிகள் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
மே மாதத்தைக் காட்டிலும், ஜூன் மாதத்தில், சந்தையின் ஏற்ற, இறக்கம் குறைவாகவே காணப்படுகிறது. ஜூலை மாதத்தை பொறுத்தவரை, 2006ம் ஆண்டு முதல், 2017ம் ஆண்டு வரை, 12 ஆண்டுகளாக, சராசரியாக, 10 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்து வந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், நிப்டியை பொறுத்தவரை, 10,930 புள்ளிகள் என்பது சவாலான ரெசிஸ்டென்ட் ஆகும். இதை மேல்நோக்கி கடக்கும் நிலையில், சந்தையில் மீண்டும் ஒரு வரலாற்று உச்சம் பெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
கடந்த இரு வாரங்களாக, மருத்துவ துறை பங்குகள் மற்றும் தொழில்நுட்ப துறை பங்குகள் உச்சம் பெற்று வருகின்றன. ஆசிய சந்தைகள், சரிவில் வர்த்தகமாகின. அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தக மோதல் காரணமாகவும், அமெரிக்க வட்டி விகித உயர்வு காரணமாகவும், சரிவில் வர்த்தகம் நடைபெற்றது. மேலும், தனியார் வங்கிகள் பங்குகளும் சந்தை உயர சாதகமாக அமைந்தன. வரும் வெள்ளியன்று, மே மாதத்துக்கான நிதி பற்றாக்குறை அறிக்கை விபரம் வர உள்ளது. கடந்த வார இறுதியில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், 1,343 கோடி ரூபாய்க்கு விற்பனையும், உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள், 1,105 கோடி ரூபாய்க்கு கொள்முதலும் நடத்தியுள்ளனர்.
இம்மாதம் 26, 27ம் தேதிகளில், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தகம் தொடர்பான பேச்சு நடைபெற உள்ளது. இதன் மாற்றமும் சந்தையில் பிரதிபலிக்கும். இந்தியா, அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும், 29 பொருட்களுக்கு சுங்க வரியை அதிகரித்துள்ளதும், இது தொடர்பான பிரச்னைகளும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். இந்த வாரம், நிப்டி ரெசிஸ்டென்ட், 10,870 மற்றும் 10,930 ஆகும். சப்போர்ட், 10,710 மற்றும் 10,650 ஆகும்.
கவனிக்க வேண்டிய பங்குகள்:
ஐ.ஆர்.பி. இன்ப்ரா, கே.பி.ஐ.டி.,, கன்சாய் நெரோலேக், ஐ.டி.சி., பி.ஏ.எஸ்.எப்.,
–முருகேஷ் குமார்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|