பதிவு செய்த நாள்
18 ஜூலை2018
23:28
வாஷிங்டன் : ‘இந்தியாவின் வளர்ச்சி, வருங்காலத்திலும் சிறப்பாக இருக்கும்’ என, பன்னாட்டு நிதியம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து, இந்நிதியத்தின் பொருளாதார ஆலோசகர், மாரிஸ் ஆப்ஸ்ட்பெல்டு கூறியதாவது: இந்தியா, கச்சா எண்ணெய்க்கு பெருமளவு இறக்குமதியை சார்ந்துள்ளது. அதனால், கச்சா எண்ணெய் உயர்வு, இந்தியாவின் வளர்ச்சி வேகத்தில், குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சர்வதேச நிதிச் சந்தையில், பணப் புழக்க குறைப்பு நடவடிக்கைகளும், வளர்ச்சி வேகத்தை குறைக்கின்றன.
இத்தகைய காரணங்களால், பன்னாட்டு நிதியம், நடப்பாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை, 0.1 சதவீதம் குறைத்து, 7.3 சதவீதமாக மறுமதிப்பீடு செய்துள்ளது. இந்த வளர்ச்சி, 2019ல், 0.3 சதவீதம் குறைக்கப்பட்டு, 7.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலையேற்றம், சர்வதேச நிதிச் சந்தை நிலவரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சற்று குறைக்கப்பட்டுள்ளது. மற்றபடி, எதிர்காலத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து வலுவாகவே காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|