பதிவு செய்த நாள்
13 ஆக2018
00:03
வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இணையதளம் மூலம் உடனடி கடனை வழங்குகின்றன. நிதி நுட்ப நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் வாயிலாக கடன் பெறும் வசதியை அறிமுகம் செய்துள்ளன. இந்த வகை டிஜிட்டல் கடன் வசதியை, இளம் தலைமுறையினர் அதிகம் பயன்படுத்துகின்றனர். எளிதாக கிடைப்பது சாதகமாக அமைந்தாலும், இந்த வகை கடன் பெறும் போது, வழக்கமாக பலரும் செய்யும் தவறுகளை தவிர்ப்பது நல்லது.
கடனுக்கான விலை என்ன?
எளிதாக கிடைக்கிறது என்பதற்காக மட்டுமே, கடன் வசதியை கண்ணை மூடிக்கொண்டு பயன்படுத்தக்கூடாது. மொத்தமாக பார்க்கும் போது, கடன் வசதி அதிக செலவு இல்லாததாக தோன்றலாம். ஆனால் வட்டியை கணக்கிட்டு பார்க்க வேண்டும். பல நேரங்களில் வட்டி விகிதம், செயல்பாட்டு கட்டணத்தில் உள்ளடங்கியிருக்கலாம்.
நிபந்தனைகள் என்ன?
பலரும் கடன் பெறும் அவசரம் அல்லது ஆர்வத்தில் விதிமுறைகளை பொறுமையாக படிப்பதில்லை. இணையதளம் அல்லது செயலி வாயிலாக கடன் பெறும் போது, தொடர்ந்து தகவல்களை சமர்ப்பித்து, கடன் அனுமதி பெறும் நிலையில், நிபந்தனைகளை அறிவதில் நேரம் செலவிடுவதில்லை; இது பாதகமாக அமையலாம்.
தரவுகள் முக்கியம்
இணைய சூழலில் கடன் பெறுவதற்கான தகவல்களை சமர்ப்பிப்பது மிகவும் எளிதாகி இருக்கிறது. தேவையான ஆவணங்களை ஆன்லைனிலேயே பதிவேற்றலாம். ஆனால், ஆன்லைனில் சமர்ப்பிக்கும் தகவல்களின் பாதுகாப்பு பற்றியும் யோசிக்க வேண்டும். இணையத்தில், ‘பிரைவசி’ பாதிப்பு அதிகம் இருப்பதை மனதில் கொள்ள வேண்டும்.
ஒப்பீடு தேவை
எளிதாக கிடைப்பதன் காரணமாக பலரும் முதல் வாய்ப்பை ஏற்றுக்கொள்கின்றனர். ஒரு, இ – மெயில் அல்லது குறுஞ்செய்தி வாயிலாக வரும் கடன் வாய்ப்பை ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால், போட்டி நிறுவனங்கள் அளிக்கும் கடன் வாய்ப்புகளை ஒப்பிட்டு, அவற்றில் சிறந்த வாய்ப்பை தேர்வு செய்வது ஏற்றதாக இருக்கும்.
அதிக கடன்
எப்போதுமே திரும்ப பெறும் ஆற்றலுக்கு ஏற்பவே கடன் வாங்க வேண்டும். ஆனால், டிஜிட்டல் கடன் வாய்ப்பால், தேவைக்கு மேல் கடன் வாங்கும் அபாயம் இருக்கிறது. லேட்டஸ்ட் மாடல் ஸ்மார்ட்போனுக்காக கடன் வாங்குவது போன்ற பழக்கம் பரவலாக உள்ளது. தேவையை அறிந்து திட்டமிட்டே செயல்பட வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|