பதிவு செய்த நாள்
20 ஆக2018
06:57
நிதி இலக்குகளுக்கு ஏற்ப முதலீட்டு காலம் அமையலாம் என்றாலும், செல்வ வளத்தை உருவாக்கி கொள்ள நீண்ட கால முதலீடு அவசியம். நீண்ட கால நோக்கிலான முதலீட்டில் பொறுமை மிகவும் அவசியம். குறுகிய கால ஏற்ற இறங்கள் முதலீட்டு முடிவை பாதிக்க கூடாது. நீண்ட கால முதலீட்டின் மூலம் பலன் பெற பின்பற்ற வேண்டிய வழிகள்:
ஆரம்ப கால முதலீடு:
புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது போலவே, இயன்ற அளவு ஆரம்ப கட்டத்திலேயே முதலீடு செய்வது அவசியம். அப்போது தான், முதலீட்டுன் மீது கூட்டு வட்டி அல்லது மறு முதலீட்டின் பலனை முழுமையாக பெற முடியும். முதலீடு செய்ய தாமதமாவதற்கு ஏற்ப, நீண்ட கால நோக்கில் கிடைக்க கூடிய பலனும் குறையலாம்.
-முதலீட்டிற்கான காலம் :
ஒவ்வொரு முதலீடும் அதற்கான நிதி இலக்கிற்கு ஏற்ப அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் அதற்கான கால அளவை அறிந்து செயல்படுத்த முடியும். உதாரணத்திற்கு ஓய்வு கால முதலீடு என்பது, 20 – 25 ஆண்டு கால வரையறை கொண்டதாக இருக்கலாம். இலக்குகளுக்கு ஏற்ப முதலீட்டு சாதனங்களை தேர்வு செய்ய வேண்டும்.
எந்த வகை முதலீடு :
நீண்ட கால திட்டமிடல் என்று வரும் போது, சரியான வகையில் முதலீட்டு சாதனங்கள் அமைந்திருக்க வேண்டும். அதாவது, முதலீடுகள் ஒரே வகையில் இல்லாமல், தேவைக்கேற்ப கடன்சார் முதலீடு, சமபங்கு, தங்கம் என, அமைந்திருக்க வேண்டும். முதலீடு பிரிக்கப்படும் விதமும் பலனை அதிகமாக்கும்.
-எஸ்.ஐ.பி., வழி :
நீண்ட கால முதலீடு என்று வரும் போது சமபங்கு முதலீடு தான் அதிக பலன் தரும். இவை மற்ற முதலீட்டு சாதனங்களை மிஞ்சுவதோடு, பணவீக்கத்தையும் வெல்லக்கூடியவையாக இருக்கின்றன. சமபங்கு முதலீட்டை, எஸ்.ஐ.பி., எனப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மண்ட் பிளான் மூலம் மேற்கொள்ளலாம்.
அவசரகால நிதி :
நீண்ட கால நோக்கில் திட்டமிடும் போது, எதிர்பாராத நெருக்கடிகளை சமாளிப்பதற்கான அவசர கால நிதியை, உருவாக்கி கொள்வது அவசியம். பொதுவாக, ஆறு மாத கால அடிப்படை செலவு, அவசர கால நிதியாக இருப்பது நல்லது. இடையே இந்த நிதியை வேறு எதற்கும் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|