பதிவு செய்த நாள்
20 ஆக2018
06:58
வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்த பிறகு, அது பரிசீலிக்கப்பட்டு ஏற்கப்பட்டதா என்பதை அறிந்து கொள்வது அவசியமாகிறது. இதற்கான நடைமுறையும் எளிதானது. ஆண்டுதோறும் முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது மட்டும் போதுமானது அல்ல. வரித்தாக்கல் செய்த பிறகு அதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதை இணையம் மூலம் அல்லது அஞ்சல் மூலம் மேற்கொள்ளலாம்.
இதன் பிறகு, வருமான வரி கணக்கு தாக்கல் நிலை என்ன என்பதை, தெரிந்து கொள்ள வேண்டும். வரித்தாக்கல் செய்த பிறகு பலவகையான நிலைகள் இருக்கின்றன. வருமான வரி இணையதளம் மூலம் இதை அறியலாம். வரித்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது, ஆனால் உறுதி செய்யப்படவில்லை என்றால், ‘வெரிபிகேஷன் பெண்டிங்’ என, குறிப்பிடப்பட்டிருக்கும். வரித்தாக்கல் செய்யப்பட்டு, உறுதியும் செய்யப்பட்டிருந்தால், ‘வெற்றிகரமாக வெரிபை செய்யப்பட்டுள்ளது’ என, குறிப்பிடப்பட்டிருக்கும்.
அடுத்த கட்டமாக, வரித்தாக்கல் பரிசீலிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். வருமான வரித்துறையால் எந்த குறைபாடும் உணரப்படாமல் வரித்தாக்கல் பரிசீலிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டதாக பொருள்.வருமான வரி சட்டத்திற்கு ஏற்ப வரித்தாக்கல் செய்யப்படவில்லை எனில், வரித்தாக்கல் குறைபாடு உள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கும். இதற்கான நோட்டீசும் அனுப்பி வைக்கப்படும். இந்த நோட்டீஸ் கிடைத்த, 15 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால், வரித்தாக்கல் செல்லாததாக கருதப்படும்.
வரித்தாக்கல் விபரங்கள் மிகவும் சிக்கலானதாக இருந்தால், அப்போது, மத்திய பரிசீலனை மையத்தில் இருந்து, அதிகாரியின் பார்வைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும். வருமான வரித்தாக்கல் இணையதளத்தின், இ – -பைலிங் பகுதியில், இது குறித்து அறியலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|