குறு, சிறு நிறுவன கடன் வளர்ச்சி சரிவு : பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.,யால் ஏற்றுமதி குறைந்ததுகுறு, சிறு நிறுவன கடன் வளர்ச்சி சரிவு : பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.,யால் ... ... அமெ­ரிக்­கா­வுக்கு யார் சொல்­வது? அமெ­ரிக்­கா­வுக்கு யார் சொல்­வது? ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2018
07:02

தேசிய பங்­குச் சந்தை குறி­யீ­டான, நிப்­டியை பொறுத்­த­வரை, கடந்த வாரம், அதற்கு முந்­தைய வாரத்­தோடு ஒப்­பி­டும் போது, தாழ்ந்த நிலை­யில் வர்த்­த­கம் ஆரம்­பித்­தா­லும், செவ்­வாய் மற்­றும் வியா­ழன், வெள்ளி கிழ­மை­களில் அதி­க­ரித்து, 11,486 புள்­ளி­களை எட்­டி­யது. இது, முந்­தைய வார உயர்­வுக்கு, 10 புள்­ளி­கள் சற்று குறை­வா­கும்.

நடப்பு நிதி­யாண்­டின் முதல் காலாண்­டில், பெரும்­பான்­மை­யான நிறு­வ­னங்­களின் நிதி அறிக்­கை­கள் லாப­க­ர­மாக அமைந்­த­தும், எதிர்­பார்த்­ததை விட அதி­க­மாக இருந்­த­தும், சந்­தை­யின் வளர்ச்­சிக்கு உறு­து­ணை­யாக இருந்தது. மேலும், கடந்த வாரம், சிமென்ட் துறை பங்­கு­கள் அனைத்­தும் உயர்ந்து, வர்த்­த­கம் ஆகி­ய­தும் குறி­யீட்டு எண் உயர வழி வகுத்­தது. மத்­திய அரசு பெட்­ரோல் இறக்­கு­ம­தியை அனு­ம­தித்­தது, சிமென்ட் உற்­பத்தி நிறு­வ­னங்­க­ளுக்கு சாத­க­மாக அமைந்­தது.

ஜெட் ஏர்­வேஸ் நிறு­வன பங்­கு­கள், முந்தைய வாரங்­களில் சரி­வில் வியா­பா­ரம் நடந்து வந்த நிலை­யில், கடந்த வாரம், 20 பில்­லி­யன் ரூபாய் மதிப்­பி­லான நிதி திரட்­டு­வது குறித்த அறிவிப்­பால் விலை உயர்ந்­தது.அமெ­ரிக்க பங்­குச் சந்­தை­களின் உயர்வு கார­ண­மாக, ஆசிய பங்­குச் சந்­தை­களில் வர்த்­த­கம் நன்கு ஆகிறது. அமெ­ரிக்கா – சீனா ஆகி­ய­வற்­றுக்கு இடையே நடந்து வந்த வர்த்­தக மோதல் குறித்து, இரு நாடு­களும் இம்­மாத இறு­தி­யில் கலந்­தா­லோ­சிக்க இருப்­ப­தாக தக­வல் வெளி வந்­தது. இது நிலவி வரும் அசா­தா­ரண சூழலை குறைக்­கும், மேலும் பொரு­ளா­தார வளர்ச்­சியை ஊக்­கு­விக்­கும் என்ற கண்­ணோட்­டத்­தி­லும் சந்தை உயர்ந்­தது.

மும்பை பங்­குச் சந்தை குறி­யீ­டான சென்­செக்ஸ், இந்த ஆண்டு, இது­வரை, 11 சத­வீ­தம் உயர்ந்த நிலை­யில் உள்­ளது. ஆசிய பங்­குச் சந்­தை­களில், இந்த ஆண்டு இந்­திய பங்­குச் சந்தை தான் அதிக வளர்ச்சி பெற்ற சந்­தை­யாக விளங்­கு­கிறது.டால­ருக்கு நிக­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு சரிவு கார­ண­மாக, தொழில் நுட்­பத் துறை பங்­கு­கள் ஆதா­யம் பெரு­கும். இருப்­பி­னும், நம் நாடு, நிலக்­கரி மற்­றும் கச்சா எண்­ணெய் ஆகி­ய­வற்றை அதி­க­மாக இறக்­கு­மதி செய்­யும் நாடு ஆகும். ரூபா­யின் மதிப்பு சரிவு கார­ண­மாக நம் இறக்­கு­மதி அதி­க­ரிக்­கும் என்­ப­தும், சந்­தை­யின் வளர்ச்­சியை கட்­டுப்­படுத்தி­யது என்றும் கூற­லாம்.

தேசிய பங்­குச் சந்தை கொண்டு வந்த கூடு­தல் கண்­கா­ணிப்பு முறை மூல­மாக வாங்­கக் கூடிய பங்­கு­களில் மொத்­தத் தொகையை செலுத்த வேண்­டும். இதன்­படி, பல பங்­கு­கள் இந்­தப் பட்­டி­ய­லில் சேர்க்­கப்­பட்­டுள்ளன. இதன் கார­ண­மா­க­வும், பங்­கு­கள் விலை­யில் பாத­க­மான போக்கு ஏற்­பட்­டது.இந்த வாரத்தை பொறுத்­த­வரை, நிப்டி அதன் முதல் ரெசிஸ்­டென்ட், 11,510 மற்­றும் 11,600 ஆகும். சப்­போர்ட், 11,350.

கவ­னிக்க வேண்­டிய பங்­குகள்எஸ்.பி.ஐ., எச்.டி.எப்.சி., ஐ.டி.சி.,ராஷ்ட்­ரீய கெமிக்­கல்ஸ் பி.ஏ.எஸ்.எப்.,

–முருகேஷ் குமார்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)