பதிவு செய்த நாள்
20 ஆக2018
07:02
தேசிய பங்குச் சந்தை குறியீடான, நிப்டியை பொறுத்தவரை, கடந்த வாரம், அதற்கு முந்தைய வாரத்தோடு ஒப்பிடும் போது, தாழ்ந்த நிலையில் வர்த்தகம் ஆரம்பித்தாலும், செவ்வாய் மற்றும் வியாழன், வெள்ளி கிழமைகளில் அதிகரித்து, 11,486 புள்ளிகளை எட்டியது. இது, முந்தைய வார உயர்வுக்கு, 10 புள்ளிகள் சற்று குறைவாகும்.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், பெரும்பான்மையான நிறுவனங்களின் நிதி அறிக்கைகள் லாபகரமாக அமைந்ததும், எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்ததும், சந்தையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது. மேலும், கடந்த வாரம், சிமென்ட் துறை பங்குகள் அனைத்தும் உயர்ந்து, வர்த்தகம் ஆகியதும் குறியீட்டு எண் உயர வழி வகுத்தது. மத்திய அரசு பெட்ரோல் இறக்குமதியை அனுமதித்தது, சிமென்ட் உற்பத்தி நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்தது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகள், முந்தைய வாரங்களில் சரிவில் வியாபாரம் நடந்து வந்த நிலையில், கடந்த வாரம், 20 பில்லியன் ரூபாய் மதிப்பிலான நிதி திரட்டுவது குறித்த அறிவிப்பால் விலை உயர்ந்தது.அமெரிக்க பங்குச் சந்தைகளின் உயர்வு காரணமாக, ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு ஆகிறது. அமெரிக்கா – சீனா ஆகியவற்றுக்கு இடையே நடந்து வந்த வர்த்தக மோதல் குறித்து, இரு நாடுகளும் இம்மாத இறுதியில் கலந்தாலோசிக்க இருப்பதாக தகவல் வெளி வந்தது. இது நிலவி வரும் அசாதாரண சூழலை குறைக்கும், மேலும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்ற கண்ணோட்டத்திலும் சந்தை உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ், இந்த ஆண்டு, இதுவரை, 11 சதவீதம் உயர்ந்த நிலையில் உள்ளது. ஆசிய பங்குச் சந்தைகளில், இந்த ஆண்டு இந்திய பங்குச் சந்தை தான் அதிக வளர்ச்சி பெற்ற சந்தையாக விளங்குகிறது.டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு காரணமாக, தொழில் நுட்பத் துறை பங்குகள் ஆதாயம் பெருகும். இருப்பினும், நம் நாடு, நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவற்றை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடு ஆகும். ரூபாயின் மதிப்பு சரிவு காரணமாக நம் இறக்குமதி அதிகரிக்கும் என்பதும், சந்தையின் வளர்ச்சியை கட்டுப்படுத்தியது என்றும் கூறலாம்.
தேசிய பங்குச் சந்தை கொண்டு வந்த கூடுதல் கண்காணிப்பு முறை மூலமாக வாங்கக் கூடிய பங்குகளில் மொத்தத் தொகையை செலுத்த வேண்டும். இதன்படி, பல பங்குகள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவும், பங்குகள் விலையில் பாதகமான போக்கு ஏற்பட்டது.இந்த வாரத்தை பொறுத்தவரை, நிப்டி அதன் முதல் ரெசிஸ்டென்ட், 11,510 மற்றும் 11,600 ஆகும். சப்போர்ட், 11,350.
கவனிக்க வேண்டிய பங்குகள்எஸ்.பி.ஐ., எச்.டி.எப்.சி., ஐ.டி.சி.,ராஷ்ட்ரீய கெமிக்கல்ஸ் பி.ஏ.எஸ்.எப்.,
–முருகேஷ் குமார்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|