பதிவு செய்த நாள்
13 செப்2018
00:30
புதுடில்லி:அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந்த நிலையில், நேற்று ஏற்றம் கண்டது.
நேற்று, அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில் இருந்தே, ரூபாய் மதிப்பு சரிந்து
வந்தது. ஒரு கட்டத்தில், முன்தினத்தை விட, 22 காசுகள் சரிந்து, முதன் முறை யாக, 72.91ஐ எட்டியது.இந்நிலையில், பிரதமர் மோடி, ஓரிரு நாட்களில், நாட்டின் பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக, ஊடகங்களில் தகவல் வெளியானது.
இக்கூட்டத்தில், கச்சா எண்ணெய் விலையேற்றம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட அம்சங்கள் குறித்த விவாதம் நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து, ரூபாய் மதிப்பு, ‘கிடுகிடு’ வென ஏறத் துவங்கியது.நேற்று, அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் இடையே, ரூபாய் மதிப்பு, அதிகபட்ச வீழ்ச்சியில் இருந்து, 100 காசுகள் உயர்ந்து, 7௧.91ஐ எட்டியது. வர்த்தகத்தின் இறுதியில், முன்தினத்தை விட, 58 காசுகள்
அதிகரித்து, 72.1௮ல் நிலை கொண்டது.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்ந்ததால், இந்திய பங்குச் சந்தைகளும் ஏற்றம் கண்டன.மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ குறியீடு,
304.83 புள்ளிகள் உயர்ந்து, 37,717.96 புள்ளிகளில் நிலை கொண்டது.
தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’ குறியீடு, 82.40
புள்ளிகள் உயர்ந்து, 11,369.90 புள்ளிகளில் நிலை பெற்றது.இன்று, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பங்கு மற்றும் அன்னியச் செலாவணி சந்தைகளுக்கு விடுமுறை என்பதால், வர்த்தகம் நடைபெறாது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|