பதிவு செய்த நாள்
17 செப்2018
00:01
பான்கார்டிற்கு விண்ணப்பிப்பது இப்போது மேலும் எளிதாகி இருக்கிறது. அரசு சேவைகளை பெற வழி செய்யும் உமாங் செயலி மூலம் பான்கார்டு பெற விண்ணப்பிக்கலாம்.
அரசு சேவைகள் டிஜிட்டல் வடிவில் வழங்கப்பட, முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அரசு துறைகளின், 300க்கும் மேற்பட்ட சேவைகளை டிஜிட்டல் வடிவில் பெறுவதற்கான வசதியை உமாங் செயலி வழங்கி வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் சேவையை இந்த செயலி மூலம் பெறலாம். இந்த வரிசையில் பான்கார்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி உமாங் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பான்கார்டில் விபரங்களை மாற்றவும் இந்த செயலியை பயன்படுத்தலாம்.
இந்த செயலி மூலம் பான்கார்டுக்கு விண்ணப்பிக்க, படிவம் 49 ஏ-வை பயன்படுத்த வேண்டும். தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். ஏற்கனவே, பான்கார்டு வைத்துள்ளவர்கள் அதில் உள்ள பெயர் உள்ளிட்ட விபரங்களில் மாற்றம் செய்ய விரும்பினாலும் இந்த செயலியை பயன்படுத்தலாம்.
மேலும், பான்கார்டு விண்ணப்பத்தின் நிலையை அறியவும் இந்த செயலியை பயன்படுத்தலாம். பான்கார்டுக்கான கட்டணத்தை படிவம் மூலம் மேற்கொள்ளலாம். பான்கார்டு சேவை மையங்கள் தொடர்பான தகவல்களையும், இந்த செயலி மூலமே அறியலாம்.
தற்போது, பான்கார்டு பெற அல்லது அதில் மாற்றங்களை செய்ய, அங்கும் இங்கும் அலையாமல், செயலி மூலம் டிஜிட்டல் வடிவிலேயே மேற்கொள்ளும் வசதி அறிமுகமாகியிருக்கிறது. அரசு சேவைகளை பெற, ‘உமாங்’ செயலியை தரவிறக்கம் செய்வது பற்றி அறிந்து கொள்வதற்கான இணையதளம்: https://web.umang.gov.in/web/#/
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|