பதிவு செய்த நாள்
17 செப்2018
23:19
புதுடில்லி: அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும், 29 பொருட்களுக்கு உயர்த்தப்பட்ட வரி, அமலுக்கு வருவது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: அமெரிக்கா, சமீபத்தில் உருக்கு, அலுமினியம் இறக்குமதிக்கு, முறையே, 25 சதவீதம் மற்றும் 10 சதவீத கூடுதல் வரி விதித்துள்ளது. இதை குறைக்க, இந்தியா விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இதையடுத்து, செப்., 18 முதல், அமெரிக்காவின், ஆப்பிள், பாதாம், வால்நட் உள்ளிட்ட, 29 பொருட்களின் இறக்குமதி வரி, 50 சதவீதம் உயர்த்தப்படும் என, மத்திய அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து, இந்தியா – அமெரிக்கா இடையே, வரி பிரச்னை குறித்து, மூன்று முறை பேச்சு நடத்தியும், உடன்பாடு ஏற்படவில்லை.
இறுதியாக, பேச்சு நடத்த, தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்திற்கான, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி, மார்க் லின்ஸ்காட், கடந்த வாரம் இந்தியா வரவிருந்தார். அவரது வருகை திடீரென ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, இன்று அமலுக்கு வரவிருந்த, அமெரிக்க பொருட்கள் இறக்குமதிக்கான புதிய வரி விதிப்பு, தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|