பதிவு செய்த நாள்
17 செப்2018
23:20
புதுடில்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, இந்தாண்டு, 11 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவடைந்துள்ளது.
இதனால், என்.ஆர்.ஐ., எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவில், குடியிருப்புகள், அலுவலக வளாகங்கள் ஆகியவற்றில், அதிகளவில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.
இது குறித்து, டி.என்.ஏ., இதழ் வெளியிட்டுள்ள அறிக்கை: ரூபாய் மதிப்பு சரிவால், மும்பை, புனே, டில்லி ஆகிய நகரங்களில், வெளிநாடு வாழ் இந்தியர்கள், குழுவாக இணைந்து குடியிருப்பு கட்டடங்களை வாங்கி வருகின்றனர்.
குறிப்பாக, அமெரிக்கா, பிரிட்டன், ஹாங்காங் ஆகிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், 100 – 150 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வாங்குகின்றனர்; உடனடியாக, வாடகைக்கும் விட்டு விடுகின்றனர்.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால், இந்த சொத்துக்கள், அவர்களை பொறுத்தவரை, 10 – -15 சதவீதம் குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஒட்டுமொத்த அளவில், அவர்கள், இந்தியாவில் செய்யும் முதலீட்டில், சராசரியாக, 25 சதவீதம் லாபம் ஈட்ட முடிகிறது. ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ள இத்தருணத்தை சரியான முறையில் பயன்படுத்தி, ஆதாயம் பார்க்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|