பதிவு செய்த நாள்
25 செப்2018
07:12
நாமக்கல் : தமிழகம் மற்றும் கேரளாவில், முட்டை கொள்முதல் விலை, 335 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று நடந்தது. முட்டை உற்பத்தி, விற்பனை நிலவரம் குறித்து, பண்ணையாளர்கள் விவாதித்தனர். அதையடுத்து, 330 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை, 5 காசு உயர்த்தப்பட்டு, 335 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.
நாட்டின் பிற மண்டலங்களில், முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 345; ஐதராபாத், 338; விஜயவாடா, 376; பர்வாலா, 368; மும்பை, 385; மைசூரு, 340; பெங்களூரு, 350; கோல்கட்டா, 421; டில்லி, 385. பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கிலோ, 73 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முட்டைக்கோழி விலையை, 5 ரூபாய் உயர்த்தி, 78 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டது.
பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், கிலோ, 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி விலையை, 5 ரூபாய் உயர்த்தி, 65 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|