பதிவு செய்த நாள்
25 செப்2018
23:43
‘ஜிம் – 2’ எனும் இரண்டாவது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில், 12 துறைகளுக்கு, அதிக கவனம் செலுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சென்னையில், 2019, ஜன., 23, 24 ஆகிய தேதிகளில், ‘ஜிம் – 2’ எனும், இரண்டாவது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பல்வேறு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், முதலீட்டாளர்கள் மாநாட்டில் குறிப்பிட்ட பல்வேறு துறைகளுக்கு, அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது: இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக, பல்வேறு சிறப்பு தகவல்கள் அடங்கிய, ‘தகவல் கையேடு’ வெளியிடப்பட்டுள்ளது. இதில், அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ் உட்பட, 11 நாடுகளில் இருந்து, தமிழகத்தில் முதலீடு செய்துள்ள, 60க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இதில், அதிக நிறுவனங்கள் தொழில் துவங்கிய நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா முதல் இடத்திலும், ஜப்பான் இரண்டாவது இடத்திலும் உள்ளன. மேலும், ஜவுளி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஹெவி இன்ஜினியரிங், மருந்தகத் துறை, வாகனம் மற்றும் வாகன உதிரிபாகங்கள், வேளாண் மற்றும் உணவு துறை களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இத்துடன் கெமிக்கல் மற்றும் பெட்ரோ கெமிக்கல், திறன் மேம்பாடு, கட்டமைப்பு, எலக்ட்ரானிக்ஸ், விமானம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய, 12 துறைகளுக்கு, அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|