பதிவு செய்த நாள்
15 அக்2018
00:22
கமாடிட்டி சந்தை கச்சா எண்ணெய்
தொடர்ந்து
நான்கு வார உயர்வுக்குப் பின், கச்சா எண்ணெய் விலை, கடந்த வாரம்
சரிந்து வர்த்தகம் ஆனது. புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில்,
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டது.
அதன் தாக்கம், கச்சா எண்ணெய் மற்றும் பொருள் வாணிப சந்தையில்
வர்த்தகமாகும் பொருட்களையும் பாதிப்புக்குள்ளாக்கியது.
அமெரிக்காவில்,
எண்ணெய் இருப்பு அதிகரித்தது மற்றும் ஈரான் மீதான அமெரிக்காவின்
பொருளாதார தடை, நவம்பர், 4ம் தேதி அமலுக்கு வரும் சூழல் ஆகிய
வற்றால் விலை சரிவு ஏற்பட்டது.அமெரிக்காவின், ‘இன்டர்நேஷனல்
எனர்ஜி அசோசியேஷன்’ வெளியிட்டுள்ள மாதாந்திர அறிக்கையில், உலகின்
தேவைக்கு அதிகமாக, சந்தையில் எண்ணெய் வரத்து உள்ளதாக
தெரிவித்திருந்தது. ஜூன் மாதத்தில், சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா
நாடுகள், கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்ப தாக
அறிவித்திருந்தன.
அதன்படி எண்ணெய் உற்பத்தி, தினசரி, 1 லட்சம் பேரல்கள் அதிகரிக்கப் பட்டன.ஈரான்
நாட்டின் மீது, அமெரிக்கா கொண்டு வந்த பொருளாதார தடை, வரும் நவம்பர்
மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இதனால், ஏற்றுமதி பாதிக்கப்பட்டு,
சந்தையில், கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவும் என்ற கருத்தும்
உள்ளது. பல ஐரோப்பிய கம்பெனிகளும், ஈரானிடம் இருந்து கொள்முதல்
செய்வதை குறைத்து வருகின்றன.
‘ஒபெக்’ உறுப்பு நாடுகளில், ஈரான் முக்கிய நாடாகும். இந்நாட்டின் ஏற்றுமதியானது, தினசரி, 2 மில்லியன்பேரல்கள் ஆகும். மொத்த உலக நுகர்வில் இது,2 சதவீதம் ஆகும்.
தங்கம் வெள்ளி
சர்வதேச
சந்தையில், தங்கம் விலை, கடந்த வாரம் உயர்ந்து வர்த்தகம் ஆனது.
ஏப்ரல் மாதத்திற்கு பின், மிகப்பெரிய வார உயர்வு இதுவே ஆகும்.
அமெரிக்கபங்குச் சந்தைகள், கடந்த வாரம், புதன் மற்றும்வியாழனில் கடும் சரிவை சந்தித்தன.இதனால்,
வியாபாரிகள் மற்றும் முதலீட்டாளர்கள், தங்களுக்கு ஏற்பட்ட
நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், முதலீட்டு ஆர்வத்தை தங்கம் மீது
திருப்பினர். மேலும், அமெரிக்க நாணய குறியீட்டு எண் மதிப்பு சிறிது
சரிந்ததும், தங்கம் மற்றும் வெள்ளி விலை உயரக் காரணமானது.
கடந்த
வியாழன் அன்று மட்டும், 1 அவுன்ஸ் தங்கம் விலை, 27 அமெரிக்க டாலர்
அதிகரித்து, 1,228 டாலர் என்ற நிலையை எட்டியது. இது, 2016 ஜூன்
மாதத்திற்கு பின் ஏற்பட்ட, ஒரு நாளின் அதிகபட்ச உயர்வாகும். இந்த
ஆண்டு சர்வதேச சந்தையில், தங்கத்தின் விலை, 8.8 சதவீதம் சரிவில்
இருந்த போதிலும், உள்நாட்டு சந்தையில், அதற்கு மாறாக, விலை
அதிகரித்து காணப்பட்டது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு, நடப்பு மாதத்தில், தங்கம் அதிகளவில் வாங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்த
ஆண்டின் முதல், 9 மாதங்களில், அதாவது, ஜனவரி முதல் செப்டம்பர்
வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் மொத்த தங்க இறக்குமதி, 15
சதவீதம் குறைந்து, 5,502.8 டன் ஆக உள்ளது.
அசாதாரண சூழல் நிலவும்
பட்சத்தில், தங்கம் ஒரு முதலீட்டு வாய்ப்பாக பார்க்கப்படும் போக்கு,
நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனால் தான் இக்கட்டான சூழ்நிலைகள்
மற்றும் பொருளாதார சிக்கல்கள் ஏற்படும் தருணங்களில், தங்கத்தின்
விலை உயர்ந்து காணப்படும்.
செம்பு
முந்தைய வார உயர்வுக்குப்
பின், கடந்த வாரம் செம்பு விலையில் சிறிதளவு இறக்கம் காணப்பட்டது.
கடந்த வாரம், அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்த, அதன்
காரணமாக, டாலருக்கு நிகரான அனைத்து பொருட்களும் சரிவை சந்தித்தன.
அமெரிக்கா,
சீனாவின் பொருட்களுக்கு மீண்டும் இறக்குமதி வரி விதிக்கும்
நிலையில், சீன அரசு, அதற்கு பதிலடியாக, அமெரிக்காவில் இருந்து
இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு, 6,000 கோடி டாலர் மதிப்பிலான
இறக்குமதி வரியை விதித்தது.இதனால், சந்தையில் அனைத்து கனிமங்களின் விலையும் உயரத் துவங்கியது.
கனிம
பொருட்கள் சார்ந்த இறக்குமதி குறையும் என்றும், உள்நாட்டு தேவை
மற்றும் உற்பத்தி பெருகும் என்ற எதிர்பார்ப்பிலும், தொழிற்சாலை
மூலதன பொருட்களான செம்பு, இரும்பு, துத்தநாகம், கார்பன் உள்ளிட்ட
அனைத்து கமாடிட்டி விலைகளும், கடந்த வாரம் விலை உயர்ந்து வர்த்தகம்
ஆனது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|