பதிவு செய்த நாள்
15 அக்2018
00:12
பண்டிகை காலம் துவங்கியுள்ள நிலையில், வர்த்தக நிறுவனங்கள் தள்ளுபடி சலுகைகள் மூலம் கவர்ந்திழுக்கலாம். பண்டிகை காலத்தை முன்னிட்டு, பல பொருட்களை வாங்கவும், பரிசளிக்கவும் நீங்கள் திட்டமிட்டிருக்கலாம். ஆனால், சரியாக திட்டமிடாவிட்டால் பட்ஜெட்
அதிகமாகி, சிக்கலை ஏற்படுத்தலாம். இதை தவிர்க்க, பண்டிகை கால,‘ஷாப்பிங்’ செய்யும் போது மனதில் கொள்ள வேண்டியவை:
திட்டமிடுங்கள்
பட்ஜெட் போட்டு செலவு செய்வது சிறந்தது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஷாப்பிங்கிற்கும் இது பொருந்தும். பண்டிகைகால ஷாப்பிங்கிற்கும் பட்ஜெட் தேவை. நீங்கள் வாங்க விரும்பும் பொருட்களை பட்டியலிட்டு, அதற்கு தேவையான தொகையை ஒதுக்க வேண்டும். மாதாந்திர பட்ஜெட்டைபதம் பார்க்காத வகையில், இந்த பட்ஜெட் அமைவது சிறந்தது.
துாண்டுதல் ஷாப்பிங்
பண்டிகை காலத்தின் போது, தள்ளுபடி சலுகைகள் மூலம் குறைந்த விலையில் பொருட்களை வாங்கலாம். ஆனால், அதற்கு முன் அந்த பொருள் தேவையானதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். முக்கியமாக செலவு அதிகமான பொருட்கள் விஷயத்தில், இந்த கேள்வி அவசியம். தள்ளுபடியால் துாண்டப்பட்டு மட்டும் பொருட்களை வாங்கக் கூடாது.
கிரெடிட் கார்டு கவனம்
கிரெடிட் கார்டு கையில் இருந்தால், பின்னர் செலுத்திக் கொள்ளலாம் என்ற, மன நிலையில் பொருட்களை வாங்கத்தோன்றும். பண்டிகை காலத்தில் இது, இன்னும் தீவிரமாக இருக்கலாம். கிரெடிட் கார்டு மூலம் வாங்குவது சுலபமாக இருந்தாலும், அது சுமையாக மாறிவிடும் வாய்ப்புள்ளதை உணர்ந்து, தேவையான பொருட்களுக்கு மட்டுமே, கார்டை நாட வேண்டும்.-
போனஸ் செலவு
பல ஊழியர்களுக்கு பண்டிகை கால போனஸ் கிடைக்கும் வாய்ப்புள்ளது. போனஸ் தொகை உற்சாகம் அளித்தாலும், அதை பயன்படுத்துவதில் புத்திசாலித்தனம் தேவை. இதில், கணிசமான பகுதியை சேமிப்பு, முதலீட்டிற்கு ஒதுக்கிய பின், எஞ்சிய தொகையையே செலவிட வேண்டும். கடன்கள் இருந்தால், அவற்றை அடைக்க முன்னுரிமை தர வேண்டும்.
விலை ஒப்பீடு
பொருட்களை வாங்கும் போது, அதிக சலுகை பெற,ஆன்லைன் ஷாப்பிங்கை பரிசீலிக்கலாம். பல நிறுவனங்கள் சலுகைகளை அறிவிப்பதால், எங்கு சிறந்த விலைகிடைக்கிறது என, பார்க்க வேண்டும். அதிக விலை கொண்ட பொருட்களை வாங்கும் முன், அவற்றுக்கான விலையை ஒப்பிட்டு பார்த்து தீர்மானிக்க வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|