பதிவு செய்த நாள்
15 அக்2018
23:41
புதுடில்லி:தனியார் துறையைச் சேர்ந்த, ‘யெஸ் பேங்க்’ நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான, ராணா கபூர், ஏற்கனவே பெற்ற போனஸ் தொகையை, வங்கிக்கு திரும்பத் தர ஒப்புக் கொண்டு உள்ளார்.யெஸ் பேங்க் மற்றும் ஆக்சிஸ் பேங்க் ஆகியவை, 10 ஆயிரம் கோடி ரூபாய் கடனை, வாராக் கடனில் சேர்க்காமல் மறைத்ததை, ரிசர்வ் வங்கி கண்டுபிடித்தது.
இதையடுத்து, ராணா கபூர், ஆக்சிஸ் வங்கி நிர்வாக இயக்குனர், ஷிகா சர்மா ஆகியோரின் பதவி நீட்டிப்பிற்கு, அனுமதி மறுக்கப்பட்டது.இதனால், ராணா கபூர், 2019, ஜனவரியுடன், யெஸ் பேங்க் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து வெளியேற உள்ளார்.இந்நிலையில், யெஸ் பேங்க் இயக்குனர் குழு உத்தரவுப்படி, ராணா கபூர், 2016- – 18 வரையிலான இரு நிதியாண்டுகளில் பெற்ற போனசை திரும்பத்தர ஒப்புக் கொண்டுள்ளார்.
அவருக்கு, நடப்பு, 2018 – -19ம் நிதியாண்டுக்கு போனஸ் கிடையாது எனவும், யெஸ் பேங்க் இயக்குனர் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.யெஸ் பேங்க், புதிய தலைமை செயல் அதிகாரியை தேர்வு செய்யும் பொறுப்பு, அமெரிக்காவைச் சேர்ந்த கோர்ன் பெர்ரி என்ற ஆலோசனை நிறுவனத்திடம் வழங்கப்பட்டு உள்ளது.இந்நிறுவனம், டிச., 15க்குள் யெஸ் பேங்க் புதிய தலைமை செயல் அதிகாரியை தேர்வு செய்து, இயக்குனர் குழுவிடம் பரிந்துரைக்கும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|