பதிவு செய்த நாள்
22 அக்2018
23:12
நாமக்கல் : தமிழகம் மற்றும் கேரளாவில், முட்டை கொள்முதல் விலை, 395 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து, பண்ணையாளர்கள் விவாதித்தனர்.அதையடுத்து, 390 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை, 5 காசு உயர்த்தி, 395 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) நிலவரம்:சென்னை, 410; ஐதராபாத், 379; விஜயவாடா, 391; பர்வாலா, 402; மும்பை, 430; மைசூரு, 407; பெங்களூரு, 400; கோல்கட்டா, 435; டில்லி, 425 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில் நேற்று நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், 1 கிலோ, 89 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டைக்கோழி விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
சதமடித்த கறிக்கோழி :
திருப்பூர் மாவட்டம், பல்லடம், உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில், 5,000க்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் மூலம், கறிக்கோழி உற்பத்தி செய்யப்படுகிறது. புரட்டாசி மாதத்தில், 30 சதவீதம் வரை, கறிக்கோழி விற்பனை சரிவடைந்தது.
இருப்பினும், உற்பத்தியை குறைக்காமல், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களின் பற்றாக்குறைக்கு ஏற்ப அனுப்பப்பட்டு வந்தது. தற்போது, புரட்டாசி மாதம் முடிந்ததால், தமிழகத்தில் கறிக்கோழி விற்பனை சூடு பிடித்துள்ளது.பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு கமிட்டி (பி.சி.சி.,), கடந்த மாதங்களில், கிலோ, 68 ரூபாயாக இருந்த விலையை, 100 ரூபாயாக உயர்த்தியது. இந்த விலை உயர்வு, பண்ணையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|