பதிவு செய்த நாள்
13 நவ2018
00:17
மும்பை:சவுதி அரேபியா, அடுத்த மாதம், கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க உள்ளதாக அறிவித்ததை அடுத்து, நேற்று, சர்வதேச பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டன. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, மீண்டும், 71 டாலரை தாண்டியது.இதனாலும், மாலையில் வெளியாகும் தொழில் துறை உற்பத்தி, சில்லரை பணவீக்க புள்ளிவிபரங்கள் குறித்த எதிர்பார்ப்பும் நேற்று, இந்திய பங்குச் சந்தைகள் சரிய வழி வகுத்தது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு, வர்த்தகத்தின் இடையே, 576 புள்ளிகள் வரை சரிந்தது. வர்த்தகத்தின் இறுதியில், 345.56 புள்ளிகள் குறைந்து, 34812.99 புள்ளிகளில் நிலை கொண்டது.தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’ குறியீடு, 103 புள்ளிகள் சரிவடைந்து, 10482.20 புள்ளிகளில் நிலை பெற்றது.
கடந்த வெள்ளியன்று, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 72.50 ஆக இருந்தது. இது நேற்று, 57 காசுகள் சரிவடைந்து, மீண்டும், 73 ரூபாயை தாண்டி வீழ்ச்சி கண்டது.எண்ணெய், எரிவாயு, வங்கி, வாகனம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|