பதிவு செய்த நாள்
16 நவ2018
00:06
புதுடில்லி:‘மத்திய அரசு, வணிகர்களுடன் இணைந்து, வலைதள சந்தை நிறுவனத்தை துவக்க வேண்டும்’ என, இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
‘அமேசான், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல்’ போன்ற தனியார் வலைதள சந்தை நிறுவனங்களை போல, மத்திய அரசு, வர்த்தகர்களுடன் இணைந்து, பொதுத் துறை வலைதள சந்தை நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என, வணிகர்கள் விரும்புகின்றனர்.
இது தொடர்பாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபுவுக்கு, இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: வலைதளங்களில் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் மின்னணு வணிகத்தில், ஒரு சில பெரிய நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன.அதனால், மத்திய அரசு, வர்த்தக கூட்டமைப்புகளுடன் இணைந்து, வலைதள சந்தை நிறுவனத்தை துவக்க வேண்டும்.
இதன் மூலம் சிறிய வர்த்தகர்கள், கைவினைஞர்கள், பெண் தொழில்முனைவோர் உட்பட ஏராளமானோர் பயன் பெறுவர். அவர்களின் பொருட்களுக்கு, வெளிப்படையான, நியாயமான விலை கிடைக்க, இந்த திட்டம் உதவும்.மின்னணு வணிகக் கொள்கையை, மத்திய அரசு விரைவில் வெளியிட வேண்டும். அத்துடன் மின்னணு வலைதள வர்த்தகத்திற்கு, ஒழுங்கு முறை கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|