வெளிநாடுகளில் தடை: ஓசூர் ரோஜா ஏற்றுமதிக்கு பாதிப்பு வெளிநாடுகளில் தடை: ஓசூர் ரோஜா ஏற்றுமதிக்கு பாதிப்பு ...  தங்க நகைகளுக்கு, ‘ஹால்மார்க்’ முத்திரை கட்டாயம்:மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல் தங்க நகைகளுக்கு, ‘ஹால்மார்க்’ முத்திரை கட்டாயம்:மத்திய அமைச்சர் ... ...
‘ஆன்லைன்’ விற்பனை நிறுவனம் மத்திய அரசு துவக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2018
00:06

புதுடில்லி:‘மத்திய அரசு, வணிகர்களுடன் இணைந்து, வலைதள சந்தை நிறுவனத்தை துவக்க வேண்டும்’ என, இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


‘அமேசான், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல்’ போன்ற தனியார் வலைதள சந்தை நிறுவனங்களை போல, மத்திய அரசு, வர்த்தகர்களுடன் இணைந்து, பொதுத் துறை வலைதள சந்தை நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என, வணிகர்கள் விரும்புகின்றனர்.


இது தொடர்பாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபுவுக்கு, இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: வலைதளங்களில் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் மின்னணு வணிகத்தில், ஒரு சில பெரிய நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன.அதனால், மத்திய அரசு, வர்த்தக கூட்டமைப்புகளுடன் இணைந்து, வலைதள சந்தை நிறுவனத்தை துவக்க வேண்டும்.


இதன் மூலம் சிறிய வர்த்தகர்கள், கைவினைஞர்கள், பெண் தொழில்முனைவோர் உட்பட ஏராளமானோர் பயன் பெறுவர். அவர்களின் பொருட்களுக்கு, வெளிப்படையான, நியாயமான விலை கிடைக்க, இந்த திட்டம் உதவும்.மின்னணு வணிகக் கொள்கையை, மத்திய அரசு விரைவில் வெளியிட வேண்டும். அத்துடன் மின்னணு வலைதள வர்த்தகத்திற்கு, ஒழுங்கு முறை கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)