பதிவு செய்த நாள்
14 டிச2018
23:32
மும்பை:ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, நேற்று சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவால், அனில் அம்பானி தலைமையிலான, ‘ரிலையன்ஸ்’ குழும நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தது.
நேற்று, சுப்ரீம் கோர்ட், பிரான்சின் டசால்ட் நிறுவனம் உடனான, ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து, நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணைக்கு உத்தரவிட முடியாது என, தீர்ப்பளித்தது.இதனால், டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து போர் விமானம் தயாரிக்க உள்ள, அனில் அம்பானியின், ‘ரிலையன்ஸ் நேவல் அண்டு இன்ஜினியரிங்’ நிறுவனத்தின் பங்கு விலை, 15.7 சதவீதம் உயர்ந்தது.
இந்நிலையில், மற்றொரு வழக்கில், ‘ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனத்தின் அலைக்கற்றை உரிமத்தின் விற்பனைக்கு, இரண்டு நாட்களில் ஒப்புதல் வழங்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்தது.இதையடுத்து, இந்நிறுவனத்தின் பங்கு விலை, 7.1 சதவீதம் உயர்ந்து, வர்த்தகத்தின் இறுதியில், 2.3 சதவீதமாக நிலைபெற்றது.இதனால், நேற்று அனில் அம்பானியின், ஐந்து நிறுவனங்களின், சந்தை மூலதனம், 480 கோடி ரூபாய் உயர்ந்தது.
இந்நிறுவனங்களின் சந்தை மூலதனம், இந்தாண்டு, 28 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சரிந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|