சேகோ ஆலைகள் இரண்டு நாள் விடுமுறை அரசு நடவடிக்கைக்கு கோரிக்கை சேகோ ஆலைகள் இரண்டு நாள் விடுமுறை அரசு நடவடிக்கைக்கு கோரிக்கை ...  ‘ஐ.நா., நிலையான வளர்ச்சி இலக்கு’ ‘ஐ.நா., நிலையான வளர்ச்சி இலக்கு’ ...
ஜி.எஸ்.டி., வரியை குறைக்க ஆடம்பர ஓட்டல்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2018
23:41

புதுடில்லி : ஆடம்பர ஓட்டல்கள் மீதான, 28 சதவீத, ஜி.எஸ்.டி., வரியை குறைக்கும் எந்த எண்ணமும் இல்லை என, ஜி.எஸ்.டி., கவுன்சில் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:நாள் ஒன்றுக்கு, 7,500 ரூபாய்க்கு அதிகமாக அறை வாடகை கொண்ட ஆடம்பர ஓட்டல்களுக்கு, 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் இந்த பிரிவுக்குள் வருகின்றன.இந்நிலையில், ‘99 சதவீத பொருட்களை, 18 சதவீத ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்’ என, பிரதமர் அண்மையில் அறிவித்தார்.

லண்டன் :
இதையடுத்து ஆடம்பர ஓட்டல்களின் மீதான வரி வரம்பை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. ஆனால், குறைக்கும் எண்ணம் எதுவும் கவுன்சிலுக்கு இல்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இது குறித்து ஓட்டல் தரப்பினர் கூறியதாவது:ஆடம்பர ஓட்டல்களுக்கு, 28 சதவீத, ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. இது தவிர, மாநகராட்சி வரி, சேவை வரி என இதர வரிகளையும் கட்டுகிறோம்.உலகில் வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு அதிகமான வரி விதிக்கப்படுவதில்லை. நியூயார்க், லண்டன், பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் இருக்கும் ஓட்டல்களை விட அதிக வரி கட்டுகிறோம். எனவே வரி வரம்பை குறைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

வாடகை :
இந்தியாவில், ஜி.எஸ்.டி.,யை பொறுத்தவரை, நாளொன்றுக்கு, 1,000 ரூபாய்க்கு குறைவாக வாடகை வசூலிக்கும் ஓட்டல்களுக்கு, வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.ஆயிரம் முதல், 2,500 ரூபாய் வாடகை வசூலிக்கும் ஓட்டல்களுக்கு, 12 சதவீத வரியும், 2,500 முதல், 7,500 ரூபாய் வரை வசூலிக்கும் ஓட்டல்களுக்கு, 18 சதவீத வரியும் விதிக்கப்பட்டுஉள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)