பதிவு செய்த நாள்
21 டிச2018
23:41
புதுடில்லி : ஆடம்பர ஓட்டல்கள் மீதான, 28 சதவீத, ஜி.எஸ்.டி., வரியை குறைக்கும் எந்த எண்ணமும் இல்லை என, ஜி.எஸ்.டி., கவுன்சில் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:நாள் ஒன்றுக்கு, 7,500 ரூபாய்க்கு அதிகமாக அறை வாடகை கொண்ட ஆடம்பர ஓட்டல்களுக்கு, 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் இந்த பிரிவுக்குள் வருகின்றன.இந்நிலையில், ‘99 சதவீத பொருட்களை, 18 சதவீத ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்’ என, பிரதமர் அண்மையில் அறிவித்தார்.
லண்டன் :
இதையடுத்து ஆடம்பர ஓட்டல்களின் மீதான வரி வரம்பை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. ஆனால், குறைக்கும் எண்ணம் எதுவும் கவுன்சிலுக்கு இல்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது குறித்து ஓட்டல் தரப்பினர் கூறியதாவது:ஆடம்பர ஓட்டல்களுக்கு, 28 சதவீத, ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. இது தவிர, மாநகராட்சி வரி, சேவை வரி என இதர வரிகளையும் கட்டுகிறோம்.உலகில் வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு அதிகமான வரி விதிக்கப்படுவதில்லை. நியூயார்க், லண்டன், பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் இருக்கும் ஓட்டல்களை விட அதிக வரி கட்டுகிறோம். எனவே வரி வரம்பை குறைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாடகை :
இந்தியாவில், ஜி.எஸ்.டி.,யை பொறுத்தவரை, நாளொன்றுக்கு, 1,000 ரூபாய்க்கு குறைவாக வாடகை வசூலிக்கும் ஓட்டல்களுக்கு, வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.ஆயிரம் முதல், 2,500 ரூபாய் வாடகை வசூலிக்கும் ஓட்டல்களுக்கு, 12 சதவீத வரியும், 2,500 முதல், 7,500 ரூபாய் வரை வசூலிக்கும் ஓட்டல்களுக்கு, 18 சதவீத வரியும் விதிக்கப்பட்டுஉள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|