பதிவு செய்த நாள்
13 பிப்2019
23:49
மாநிலங்களுக்கு உள்ளே எடுத்துச் செல்லும் பொருட்களுக்கு பெறும், ஒரு, ‘இ – வே பில்’ பதிவில், பல முறை சரக்குகள் எடுத்துச் சென்றால், மதிப்புக்கு ஏற்றவாறு அபராதம் விதிக்கப்படும் என, வணிக வரி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மாநிலங்களுக்கிடையே, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சரக்குகளை எடுத்துச் செல்ல, ‘ஆன்லைன்’ மூலம் அனுமதி பெறும், இ – வே பில் நடைமுறை, நாடு முழுவதும், 2018ம் ஆண்டு, ஏப்., 1ல் அமலுக்கு வந்தது.மாநிலத்துக்கு உள்ளே, 1 லட்சம் ரூபாய் மதிப்புக்கு மேல் எடுத்துச் செல்லப்படும் அனைத்து பொருட்களுக்கும், ஆன்லைன் இ – வே பில் கட்டாயம் பெற வேண்டும். இ – வே பில் பெறாத லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஒரு இ – வே பில்லில், பல முறை சரக்குகளை எடுத்துச் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து, வணிக வரி அதிகாரிகள் கூறியதாவது:மாநிலங்களுக்குஇடையே எடுத்துச் செல்லும் சரக்குகளுக்கு, இ – வே பில் மற்றும் உரிய ஆவணங்கள் சரியாக இருக்கின்றன. ஆனால், மாநிலத்துக்கு உள்ளே எடுத்துச் செல்லும் பொருட்களுக்கு, இ – வே பில், உரிய ஆவணங்கள் சரியாக இருப்பதில்லை.
ஒரு, இ – வே பில் பதிவு செய்து, பல முறை சரக்குகளை எடுத்துச் செல்கின்றனர். ஒரு லாரியில் ஏற்றும் சரக்கிற்கு, 2 லட்சம் ரூபாய்க்கு கீழ் மதிப்பு நிர்ணயித்து, பில் பதிவு செய்கின்றனர்.இவற்றை துல்லியமாக ஆய்வு செய்தால் மட்டுமே, கண்டுபிடிக்கும் நிலை உள்ளது.
இதற்கு முக்கிய காரணம், இ – வே பில் பதிவுக்கான அவகாசம், 24 மணி நேரம் இருப்பதே.இந்த கால அவகாசத்தை 12 மணி நேரமாக குறைத்தால், இந்த தவறுகள் நடப்பதை குறைக்கலாம். மேலும், இது போன்ற மோசடியில் ஈடுபடும், லாரிகள், நிறுவனங்கள் மீது, மதிப்புக்கேற்றவாறு அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|