பதிவு செய்த நாள்
01 ஜூன்2019
06:43
சென்னை: ‘‘சிமென்ட் உற்பத்தியை, 2020ல், 2 கோடி டன்னாக உயர்த்துவதே இலக்கு,’’ என, ராம்கோ நிறுவனத்தின் தலைவர், பி.ஆர்.வெங்கட்ராம ராஜா தெரிவித்தார்.
ராம்கோ சிமென்டின் புதிய தயாரிப்பான, ‘ராம்கோ சூப்பர்கிரீட்’ அறிமுக விழா, சென்னையில் நேற்று நடந்தது. அப்போது, செயல் தலைவர், பாலாஜி கே.மூர்த்தி கூறியதாவது:உலகிலேயே அதிக சிமென்ட் உற்பத்தி செய்யும் நாடுகளில், சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனாவில் ஆண்டுக்கு, 250 கோடி டன் சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகிறது.இந்தியாவில், 44 கோடி டன் உற்பத்தி செய்யப்படுகிறது. தென் மாநிலங்களில், 16 கோடி டன் உற்பத்தி செய்யப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
ராம்கோ சிமென்ட் நிறுவனத்தின் தலைவர், பி.ஆர்.வெங்கட்ராம ராஜா கூறியதாவது: வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து, தற்போது, ‘ராம்கோ சூப்பர்கிரீட்’ என்ற பிரீமியம் தயாரிப்பை வழங்கி உள்ளோம்.சுவரில் வெடிப்புகள் ஏற்படாத வகையில், இந்த சிமென்ட் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், சூப்பர்கிரீட் தயாரிக்கப்பட்டுள்ளது. எளிதில் மக்கக்கூடிய பைகளில் இந்த சிமென்ட் நிரப்பப்படுகிறது.
தற்போது, நிறுவனத்தின் சிமென்ட் உற்பத்தியின் அளவு, 1.25 கோடி டன்னாக இருக்கிறது. இதை, 2020க்குள், 2 கோடி டன்னாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக, 3,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|