பதிவு செய்த நாள்
01 ஜூன்2019
06:49
புதுடில்லி : கடந்த, 2018 -– 19ம் நிதியாண்டில், ஜி.டி.பி., எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 5.8 சதவீதமாக சரிவடைந்துள்ளது.
இதற்கு முன், 2013 – -14ல், ஜி.டி.பி., 6.6 சதவீதமாக இருந்தது.கடந்த நிதியாண்டின், ஜன., – மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில், ஜி.டி.பி., 5.8 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது.மக்களின் தேவைப்பாடு குறைந்துள்ளதால், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி மந்தமாக உள்ளது. கார் விற்பனையின் சரிவால், நிறுவனங்கள், வாகன தயாரிப்பை குறைத்துள்ளன.அதுபோல, நுகர்பொருட்கள் விற்பனையும் குறைந்துள்ளது. கடந்த சில காலாண்டுகளில், சோப்பு, பிஸ்கட், சமையல் எண்ணெய் உள்ளிட்ட, நுகர்பொருட்கள் விற்பனை மந்தமடைந்துள்ளது.
இதன் எதிரொலியாக, ஜி.டி.பி., வளர்ச்சி சரிவடைந்துள்ளது. எனவே, மத்தியில் அமைந்துள்ள புதிய அரசு, மக்களின் செலவழிப்பு வருவாயை அதிகரித்து, தேவைப்பாட்டை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதனால், நிறுவனங்கள் ஆர்வமுடன் முதலீடு செய்ய முன்வரும். தொழில் நிறுவனங்கள், உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், அதிக அளவில் ஆட்களை பணிக்கு அமர்த்தும் என, பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
தயாரிப்பு துறை:
இந்தாண்டு, ஜன., – மார்ச் வரையிலான காலாண்டில், தயாரிப்பு துறை வளர்ச்சி, 3.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே காலத்தில், 9.5 சதவீதமாக இருந்தது.எனினும், 2018 -– 19ம் முழு நிதியாண்டில், இத்துறையின் வளர்ச்சி, 6.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, 2017 – -18ம் நிதியாண்டில், 5.9 சதவீதமாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|