பதிவு செய்த நாள்
19 ஜூன்2019
07:15
புதுடில்லி: ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகள், நேற்று, 41 சதவீதம் அளவுக்கு, விலை சரிவினை சந்தித்துள்ளன.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்கும் முயற்சியில் வெற்றி கிடைக்காததால், அதற்கு கடன் வழங்கிய, எஸ்.பி.ஐ., உள்ளிட்ட வங்கிகள், இப்பிரச்னையை, தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்துக்கு கொண்டு செல்ல முடிவெடுத்தன. இதனையடுத்து, நேற்று, ஜெட் ஏர்வேஸ் பங்குகள் மளமளவென கீழே விழுந்தன.
மும்பை பங்குச் சந்தையில், இந்நிறுவன பங்குகள், 40.78 சதவீதம் சரிவினை சந்தித்து, ஒரு பங்கு விலை, 40.45 ரூபாயாக நிலை கொண்டது. வர்த்தகத்துக்கு இடையே, 52.78 சதவீதம் அளவுக்கு சரிவு கண்டு, இதுவரை இல்லாத வகையில், 32.25 ரூபாயை தொட்டது. தொடர்ந்து, 12 நாட்களாக சரிவினை சந்தித்துள்ளது ஜெட் நிறுவன பங்குகள். இதனால் 73 சதவீதம் விலை சரிவு கண்டதுடன், 1,253.5 கோடி ரூபாய் சந்தை மதிப்பிழப்பும் ஏற்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|