வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகள் தொடர்ந்து எழுச்சி: சென்செக்ஸ் 1000 புள்ளிகள் ஏற்றம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 செப்2019
11:08
மும்பை : கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ச்சியாக எழுச்சியுடன் உள்ளன. கடந்த வெள்ளியன்று சென்செக்ஸ் 2000க்கும் அதிகமான புள்ளிகள் உயர்ந்த நிலையில் இன்று(செப்.,23) மேலும் 1000 புள்ளிகள் ஏற்றம் கண்டன.
காலை 9.30 மணியளவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1031.58 புள்ளிகள் உயர்ந்து 39,346.01ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 263.75 புள்ளிகள் உயர்ந்து 11,537.95ஆகவும் வர்த்தகமாகின.
தொடர்ந்து வர்த்தகநேர முடிவில் சென்செக்ஸ் 1075.41 புள்ளிகள் உயர்ந்து 39,090.03ஆகவும், நிப்டி 326 புள்ளிகள் உயர்ந்து 11,600.20ஆகவும் முடிந்தன.
பொருளாதார மந்த நிலையை சரி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த வெள்ளியன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கார்ப்பரேட் வரியை 30 சதவீத்தில் இருந்து 25 சதவீதமாக குறைத்தார். இதன் எதிரொலியாக பங்குச்சந்தைகள் அன்றே அதிரடியாக ஏற்றம் கண்டன. ஒரே நாளில் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்கள் முதலீடு 6.83 லட்சம் கோடியாக அதிகரித்தது. தொடர்ந்து அதன் தாக்கம் இன்றும் பங்குச்சந்தைகளில் எதிரொலிக்கிறது. இதனால் இன்றைய வர்த்தகமும் உயர்ந்து இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய வர்த்தகத்தில் எச்டிஎப்சி., ஐடிசி., எல்அண்ட்டி., ஐசிஐசிஐ., மாருதி, பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் நிறுவன பங்குகள் அதிக ஏற்றத்துடன் வர்த்தகமாகின.
ரூபாயின் மதிப்பு ஏற்ற - இறக்கம்
பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்த போதிலும் ரூபாயின் மதிப்பு ஏற்ற - இறக்கமாக இருந்தது. வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் சரிந்து ரூ.71.03ஆக வர்த்தகமானது. தொடர்ந்து காலை 10.50 மணியளவில் ரூபாயின் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து வர்த்தகமானது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 23,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 23,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 23,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 23,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 23,2019
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!