பதிவு செய்த நாள்
23 செப்2019
15:26
லண்டன்: இங்கிலாந்தை சேர்ந்த 178 ஆண்டுகள் பழமையான தாமஸ் குக் சுற்றுலா நிறுவனம், கடனில் மூழ்கியதால் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தை நம்பி சுற்றுலா சென்ற லட்சக்கணக்கான மக்கள் தவிப்பில் உள்ளனர்.
இங்கிலாந்தை சேர்ந்த தாமஸ் குக் என்பவர், தனது பெயரிலேயே சுற்றுலா ஏஜென்சி நிறுவனத்தை தொடங்கினார். பிரிட்டனில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் சுற்றுலா செல்ல பயணிகளுக்கு ரயில், விமானம் உள்ளிட்ட அனைத்து வசதிகளை இந்நிறுவனம் செய்து வந்தது. படிப்படியாக வளர்ந்த இந்நிறுவனம் 16 நாடுகளில் தமது கிளையை விரிவுப்படுத்தியது. இந்நிறுவனத்திற்கு சொந்தமாக ஓட்டல்கள், ரெஸார்ட், விமானங்கள் உள்ளன. ஆண்டுக்கு சராசரியாக 90 லட்சம் வாடிக்கையாளர்கள் இந்நிறுவனத்தில் சுற்றுலா சென்று வந்தனர்.
கடந்த சில மாதங்களாகவே இந்நிறுவனம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து, நஷ்டத்தில் இயங்கி வந்தது. சுமார் 15 ஆயிரம் கோடி கடனில் இருப்பதாக கூறப்படுகிறது. இதை சரி செய்ய அந்நிறுவனம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் தோல்வியடையவே இறுதியாக இந்நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணியர் தவிப்பு
தாமஸ் குக் நிறுவனம் திவாலால் இந்நிறுவனத்தை நம்பி பயணித்த லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் தவிப்பில் உள்ளனர். இவர்களில் 1.5 லட்சம் பேர் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள். இங்கிலாந்து விமானங்கள் மூலம் இரண்டு வாரங்களில் இவர்கள் மீட்கப்படுவர் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
மன்னிப்பு கேட்ட தாமஸ் குக்
இதுதொடர்பாக பேசிய தாமஸ் குக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பீட்டர் பேங்கவுசர், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்பதாக தெரிவித்துள்ளார். இந்தநாள் எங்களுக்கு மிகவும் சோகமான நாள் எனவும் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|