பதிவு செய்த நாள்
24 செப்2019
05:34
மும்பை: கார்ப்பரேட் வரி குறைப்பு அறிவிப்பையடுத்து, இந்திய பங்குச் சந்தைகள், இரண்டாவது நாளாக, நேற்றும் உயர்வைக் கண்டன.
கடந்த வெள்ளிகிழமை அன்று, மத்திய நிதிஅமைச்சர், நிர்மலா சீதாராமன், நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி குறித்த சலுகை அறிவிப்புகளை வெளியிட்டார்.ஏற்றம்இதையடுத்து, அன்றைய தினம் பங்குச் சந்தைகள், 10 ஆண்டுகளில் காணாத உயர்வை கண்டன.
இந்நிலையில், நேற்றும், பங்குச் சந்தைகள், கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத உயர்வைக் கண்டன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண், சென்செக்ஸ், 1,075 புள்ளிகள் அதிகரித்து, ஏற்றம் கண்டது.வர்த்தகத்தின் இடையே, 1,426 புள்ளிகள் வரை ஏற்றம் கண்ட சென்செக்ஸ், வர்த்தக முடிவில், 1075.41 புள்ளிகள் அதிகரித்து, 39,090.03 புள்ளிகளில் நிலைபெற்றது. 2.8 சதவீதம் உயர்வாகும் இது.
இதேபோல், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி, 326 புள்ளிகள் அதிகரித்து, வர்த்தக இறுதியில், 11,600.20 புள்ளிகளில் நிலைபெற்றது. இது 2.9 சதவீதம் உயர்வாகும்.கடந்த வெள்ளியன்று, நிதியமைச்சரின், கார்ப்பரேட் வரி குறைப்பு அறிவிப்பினை அடுத்து, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு, 10 ஆண்டுகளில் காணாத வகையில், 1,921.15 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 38,014.62 புள்ளிகளாக உயர்ந்தது. இது, 5.32 சதவீதம் உயர்வு ஆகும்.
இதே போல், தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும், 569.40 புள்ளிகள் அதிகரித்து, 11,274.20 புள்ளிகளாக உயர்ந்தது.கடந்த இரண்டு வர்த்தக நாட்களில் மட்டும், சென்செக்ஸ் மொத்தம், 2,996.56 புள்ளிகள் அதிகரித்தது. அதாவது, 8.30 சதவீதம் உயர்வு கண்டது.இதேபோல், நிப்டியும் கடந்த இரண்டு வர்த்தக நாட்களில் மொத்தம், 895.40 புள்ளிகள், அதாவது, 8.36 சதவீதம் உயர்வைக் கண்டது.இரண்டு நாட்களில், முதலீட்டாளர்களின் பண மதிப்பு, 10.35 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்தது.பஜாஜ் பைனான்ஸ், எல் அண்டு டி., ஏசியன் பெயின்ட்ஸ், ஐ.டி.சி., ஆக்சிஸ் பேங்க், கோட்டக் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், எச்.டி.எப்.சி., மாருதி, எஸ்.பி.ஐ., ஆகியவை, 8.70 சதவீதம் அளவுக்கு உயர்வைக் கண்டன.இதற்கு மாறாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், பவர்கிரிட், என்.டி.பி.சி., பார்தி ஏர்டெல், டெக்மகிந்திரா, டி.சி.எஸ்., எச்.சி.எல்., ஆகிய பங்குகள், 4.97 சதவீதம் வரை இழப்பை சந்தித்தன. மூலதனம்பங்குச் சந்தைகள் உயர்வு குறித்து, ‘சென்ட்ரம் வெல்த் மேனேஜ்மென்ட்’ நிறுவனத்தின், பங்கு ஆலோசனை பிரிவின் தலைவர், தேவங் மேத்தா கூறியதாவது:கார்ப்பரேட் வரியை குறைப்பதாக நிதிஅமைச்சர் அறிவித்ததன் காரணமாகவே, தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும், பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டு உள்ளன.
கார்ப்பரேட் வரியை குறைப்பதால், நிறுவனங்களின் லாபம் அதிகரிக்கும் என்ற கண்ணோட்டத்தில், சந்தைகள் உயர்வு பெற்றன.கார்ப்பரேட் வரி குறைப்பால் கிடைக்கும் லாபத்தினால், பொருட்கள் விலை குறைக்கப்பட்டு, வாங்கும் தேவை அதிகரிக்கப்படலாம்; அல்லது பங்குதாரர்களுக்கு லாபத்தை ஈவுத்தொகையாக நிறுவனங்கள் வழங்கலாம்; அல்லது மூலதன செலவுகளுக்குப் பயன்படுத்தப்படலாம். இவ்வாறு, அவர் கூறினார்.ஓட்டல் நிறுவன பங்குகள் ஓட்டல் அறை வாடகை கட்டணங்களுக்கான வரி குறைப்பை, ஜி.எஸ்.டி., கவுன்சில் அறிவித்ததை அடுத்து, ஓட்டல் நிறுவன பங்குகள், நேற்று, 20 சதவீதம் வரை உயர்வைக் கண்டன.வெள்ளிக்கிழமை வர்த்தக நேரம் முடிந்த பின், ஜி.எஸ்.டி., அறிவிப்புகள் வந்ததால், அதன் தாக்கம், இன்றைய சந்தையில் பிரதிபலித்தது.தாஜ் ஜி.வி.கே., ஓட்டல்ஸ் அண்டு ரிசார்ட்ஸ் பங்குகளின் விலை, 19.98 சதவீதம் உயர்வைக் கண்டது.
இதேபோல், ராயல் ஆர்கிட் ஓட்டல்ஸ், 15.30 சதவீதமும், இண்டியன் ஓட்டல் கம்பெனி, 8.20 சதவீதமும், ஐ.டி.சி., 6.95 சதவீதமும், ஓட்டல் லீலா வெஞ்சர், 3.59 சதவீதமும் விலை அதிகரித்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|