பதிவு செய்த நாள்
17 நவ2019
03:14
புதுடில்லி: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் பதவியை, அனில் அம்பானி ராஜினாமா செய்துள்ளார்.
கடனில் மூழ்கியுள்ள, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், அனில் அம்பானி இயக்குனர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக, அது தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.அறிக்கையின் படி, அனில் அம்பானியுடன், சாயா விரானி, ரைனா கரானி, மஞ்சரி காக்கர், சுரேஷ் ரங்காச்சார் ஆகியோரும் தங்கள் இயக்குனர் பதவியை ராஜினாமா செய்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், நிறுவனத்தின் இயக்குனரும் தலைமை நிதி அதிகாரியுமான மணிகண்டனும் இதற்கு முன் ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்ததையும் அறிக்கையில் குறிப்பிட்டுஉள்ளது.இந்த ராஜினாமாக்களை, நிறுவனத்துக்கு கடன் வழங்கியவர்கள் குழுவிடம், அவர்களின் பரிசீலனைக்காக வழங்கப்பட்டுள்ளது.தற்போது, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திவால் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம், கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், 30 ஆயிரத்து, 142 கோடி ரூபாய் நிகர இழப்பை சந்தித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|