பதிவு செய்த நாள்
31 மார்2020
15:33
மும்பை : ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட எழுச்சி, முன்னணி நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டதால் இந்திய பங்குச்சந்தைகள் எழுச்சி பெற்றன. சென்செக்ஸ் 1200 புள்ளி வரை ஏற்றம் கண்டது.
கொரோனாவால் இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்த நிலையில் இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே சென்செக்ஸ் 500 புள்ளியும், நிப்டி 195 புள்ளியும் உயர்வுடன் துவங்கின. கொரோனாவில் இருந்து சீனா மீண்டு இருப்பதாலும், அங்கு இயல்பு நிலை திரும்புவதாலும், அந்நாட்டு முன்னணி நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை தொடங்கி இருப்பதாலும் ஆசியாவின் பிற பங்குச்சந்தைகள் உயர்ந்தன. மேலும் நம் நாட்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎப்சி., இன்போசிஸ் போன்ற நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டதாலும், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியதாலும், ரூபாயின் மதிப்பு உயர்ந்ததாலும் வர்த்தகம் தொடர்ந்து ஏற்றம் கண்டன.
மதியம் 2.30 மணியளவில் சென்செக்ஸ் 1200 புள்ளி உயர்ந்து 29,630ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 350 புள்ளி உயர்ந்து 8623.60ஆகவும் வர்த்தகமாகின.
வர்த்தகநேர முடிவில் சென்செக்ஸ் 1,028.17 புள்ளி உயர்ந்து 29,468.49ஆகவும், நிப்டி 316.65 புள்ளி உயர்ந்து 8,597.75ஆகவும் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் 1495 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 767 நிறுவன பங்குகள் சரிந்தும், 150 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|