பதிவு செய்த நாள்
03 ஏப்2020
23:11
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, கடந்த, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைக் காணும் என, ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ தெரிவித்து உள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை, 5.1 சதவீதத்திலிருந்து, 2 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது.
இது குறித்து, பிட்ச் ரேட்டிங்ஸ் தெரிவித்துஉள்ளதாவது:உலக மந்தநிலையை ஒட்டி, இந்தியாவின், நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சியை, இதற்கு முன் கணித்திருந்த, 5.1 சதவீதம் என்பதிலிருந்து குறைத்து, 2 சதவீதமாக கணித்துள்ளோம். இது கடந்த, 30 ஆண்டுகளில் காணப்படாத குறைவான வளர்ச்சியாகும்.
நுகர்வோர் செலவழிப்பது குறையும் என்பதால், நுண், சிறு, குறு நிறுவனங்கள் பிரிவு மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும்.வங்கி சாரா நிதிநிறுவனங்களிடமிருந்து கடன் வாங்குபவை, சிறிய நிறுவனங்களாகவும் குறைவான பண இருப்பு கொண்டதாகவும் இருக்கும்.இவற்றின் வருமானம் குறையும்பட்சத்தில், கடனை திருப்பிச் செலுத்துவதில் சிக்கல்கள் எழும். இவ்வாறு, பிட்ச் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|