கடன் சலுகை சுமையை எதிர் கொள்வது எப்படி கடன் சலுகை சுமையை எதிர் கொள்வது எப்படி ...  செல்வத்தை பறித்த கொரோனா அம்பானி, அதானிகளுக்கு இழப்பு செல்வத்தை பறித்த கொரோனா அம்பானி, அதானிகளுக்கு இழப்பு ...
சேவைகள் துறை வளர்ச்சியில் சரிவு மார்ச்சில் 49.3 புள்ளிகளாக சரிவைக் கண்டது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2020
23:57

புதுடில்லி:நாட்டின், சேவைகள் துறையின் வளர்ச்சி, கடந்த மார்ச் மாதத்தில், குறைந்து உள்ளது என, ‘ஐ.எச்.எஸ்.,மார்க்கிட் இந்தியா’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நிக்கி – மார்க்கிட்’ நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம், கடந்த மார்ச் மாதம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

நாட்டின் சேவைகள் துறையின் வளர்ச்சி, மார்ச் மாதத்தில் குறைந்து உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினால், வெளிநாட்டு சந்தைகளில் தேவை பெருமளவு குறைந்துவிட்டது. இதனையடுத்து, மார்ச் மாதத்தில், சேவைகள் துறையின் வளர்ச்சியை குறிக்கும், ‘நிக்கி – ஐ.எச்.எஸ்., மார்க்கிட் எஸ்.பி.எம்.ஐ.,’ குறியீடு, 49.3 புள்ளிகளாக குறைந்துவிட்டது.

இதுவே, கடந்த பிப்ரவரி மாதத்தில், 57.5 புள்ளிகளாக, அதாவது, 85 மாதத்தில் இல்லாத அளவில் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும். மார்ச் மாதத்தில், வளர்ச்சி, 8 புள்ளிகளுக்கு மேல் சரிந்ததன் காரணமாக, 2019ம் ஆண்டில் காணப்பட்ட வளர்ச்சி வேகத்தின் பயன் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

பலவீனமான தேவைகள் காரணமாக, வணிக செயல்பாடுகள் குறைந்து உள்ளன. மேலும், தேவைகள் குறைந்ததால், பல நிறுவனங்கள் ஊழியர்கள் எண்ணிக்கையையும் குறைத்துவிட்டன.கடந்த, 2019ம் ஆண்டுக்கு பிறகு, சேவைகளுக்கான ஆர்டர்கள் மிகவும் குறைந்துள்ளன.வைரஸ் பாதிப்பினால், புதிய ஆர்டர்கள் குறைந்து உள்ளன. மேலும், பணப்புழக்க சிக்கல்களின் விளைவாக, பல நிறுவனங்களின் வணிகம் குறைந்து போய்விட்டது.

இதற்கிடையே, உற்பத்தி மற்றும் சேவை துறை இரண்டும் சேர்ந்த, கூட்டு பி.எம்.ஐ., மார்ச் மாதத்தில், 50.6 புள்ளிகளாக உள்ளது. இதுவே பிப்ரவரி மாதத்தில், 57.6 புள்ளிகளாக இருந்தது.நாடு முடக்கப்பட்டது மற்றும் பொருளாதார பாதிப்புகள் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான முழு அழுத்தமும், இப்போது அரசாங்கத்தின் மீது உள்ளது.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, இந்திய சேவைகள் துறையின் வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள், இன்னும் முழுமையாக உணரப்படவில்லை. இனிமேல்தான் தெரியவரும்ஜோ ஹேய்ஸ்பொருளாதார நிபுணர், ஐ.எச்.எஸ்., மார்க்கிட்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)