பதிவு செய்த நாள்
07 ஏப்2020
00:04
மும்பை:கடந்த இரண்டு மாதங்களில், சந்தையில் ஏற்பட்ட கடும் சரிவு காரணமாக, முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு, மார்ச், 31ம் தேதி நிலவரப்படி, 28 சதவீதம் சரிந்துள்ளதாக, ஹுருன் ரிப்போர்ட் இந்தியா நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு, 28 சதவீதம் சரிந்துள்ள நிலையில், அவரது பணம் உள்ளிட்ட செல்வத்தின் மதிப்பு, 1.44 லட்சம் கோடியாக சரிந்துள்ளது. இதனையடுத்து, முகேஷ் அம்பானி, உலக செல்வந்தர்கள் பட்டியலில், எட்டு இடங்கள் குறைந்து, 17 வது இடத்துக்கு இறங்கியுள்ளார்.
இதேபோல், அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானியின் செல்வம், 37 சதவீதம் குறைந்துள்ளது.இவர் கிட்டத்தட்ட, 45 ஆயிரத்து, 600 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளார்.இதேபோல், எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஷிவ் நாடார், 26 சதவீதம் அளவுக்கும்; உதய் கோட்டக், 28 சதவீதம் அளவுக்கும் இழப்பை சந்தித்துள்ளனர்.
உலகின், டாப் 100 செல்வந்தர்கள் பட்டியலில், அம்பானியை தவிர, மீதி மூவரும் வெளியேறி உள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்திய பங்குச் சந்தைகள், 25 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளன.உலகளவில் அதிக செல்வத்தை இழந்தவர்கள் பட்டியலில், முகேஷ் அம்பானி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
பிரான்சை சேர்ந்த, எல்.வி.எம்.எச்., தலைமை நிர்வாகி, பெர்னார்டு அர்னால்டு அதிகபட்ச இழப்பை சந்தித்துள்ளார். இவர், 2.28 லட்சம் கோடி ரூபாய் இழந்துள்ளார்.பங்குச் சந்தை பிதாமகன், வாரன் பபெட், 1.44 லட்சம் கோடி ரூபாயை இரண்டு மாதங்களில் இழந்துள்ளார்.
அமேசானின் ஜெப் பெசோஸ், தொடர்ந்து உலக செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறார். இவரை அடுத்து பில்கேட்ஸ் உள்ளார்.இதற்கு மாறாக, கடந்த இரண்டு மாதங்களில், சீன பெரும் செல்வந்தர்கள் அதிக லாபம் ஈட்டியவர்களாக உள்ளனர். உலக செல்வந்தர், 100 பேர் பட்டியலில், இந்தியா, மூவரை இழந்துள்ளது. சீனா, ஆறு பேர்களை சேர்த்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|