பதிவு செய்த நாள்
11 ஆக2020
22:42
புதுடில்லி:நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூன் மாதத்தில், 16.6 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. இதற்கு, தயாரிப்பு துறை, சுரங்கம், மின் உற்பத்தி ஆகியவற்றில் ஏற்பட்ட சரிவே காரணம்.
இது குறித்து, மத்திய புள்ளியியல் அமைச்சகம்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:தயாரிப்பு துறை உற்பத்தி, கடந்த ஜூனில், 17.1 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. சுரங்கம் மற்றும் மின் உற்பத்தி முறையே, 19.8 சதவீதம்; 10 சதவீதம் என, சரிந்துள்ளது.இந்த தரவுகளை, கொரோனாவுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிட்டு பார்க்க இயலாது. இருப்பினும், முந்தைய மாதங்களுடன் ஒப்பிடும்போது முன்னேற்றம் கண்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில், தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி குறியீடு, 53.6 ஆக இருந்தது. மே மாதத்தில், 89.5 ஆக முன்னேற்றம் கண்டது. இப்போது, ஜூன் மாதத்தில் இக்குறியீடு, 107.8 ஆக உயர்வைக் கண்டுள்ளது.நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து, கடந்த மார்ச் மாதத்திலிருந்து நாடு முழுக்க ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டன.
இதன் காரணத்தால், பெரும்பாலான தொழில்துறை நிறுவனங்கள் முழுமையாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.இந்நிலையில், தற்போது தளர்வுகள் படிப்படியாக அறிவித்து வருவதை அடுத்து, இத்துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.தொற்று நோய் பரவல் காரணமாக, மே மாதத்திலும், ஜூன் மாதத்திலும் முழுமையான அறிக்கையை அரசு வெளியிடவில்லை. மேலும், ஜூன் மாத தரவுகள் ஆறு வார தாமதத்துடன் அறிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|