பதிவு செய்த நாள்
23 செப்2020
22:14
புதுடில்லி ;எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய் உள்கட்டமைப்பு சேவை நிறுவனமான, ‘லிக்கிதா இன்பிராஸ்ட்ரக்சர்’, 29ம் தேதியன்று பங்கு வெளியீட்டுக்கு வர இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும், ஒரு பங்கின் விலை, 117 – 120 ரூபாய் என நிர்ணயித்து அறிவித்துள்ளது.இந்த
பங்குவெளியீட்டின் மூலம், அதிகபட்ச பங்கு விலையின் அடிப்படையில், 61.2 கோடி ரூபாய் திரட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, இம்மாதம், 29ம் தேதி துவங்கி, அக்டோபர், 1ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.இந்த பங்கு வெளியீட்டின்போது, 51 லட்சம் புதிய பங்குகள் வெளியிடப்பட உள்ளன.
எண்ணெய் மற்றும் எரிவாயுவின் தேவை அதிகரித்து வரும் நிலையில், அதை பயன்படுத்திக் கொள்ள இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, பங்கு வெளியீட்டின் மூலம்
திரட்டப்படும் நிதியை, நிறுவனத்தின் நடைமுறை மூலதனத்துக்கும், பிற பொதுவான
நிறுவன தேவைகளுக்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.ஐதராபாதை அடிப்படையாக கொண்ட இந்த நிறுவனம், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, குழாய் பதிக்கும் பணிகளை
மேற்கொண்டு வருகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|