தங்கம் விலை சவரன் ரூ.520 சரிவுதங்கம் விலை சவரன் ரூ.520 சரிவு ...  ‘ஆன்லைன்’ இறைச்சி  விற்பனை அதிகரிப்பு ‘ஆன்லைன்’ இறைச்சி விற்பனை அதிகரிப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஆறு வர்த்தக நாட்களில் ரூ.11 லட்சம் கோடி இழப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2020
04:37

மும்பை:தொடர்ந்து ஆறாவது நாளாக, நேற்றும் இந்திய பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டன.


கடந்த ஆறு வர்த்தக நாட்களில் மட்டும் முதலீட்டாளர்கள், 11.31 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பை சந்தித்தனர்.நேற்று மட்டும், 3.95 லட்சம் கோடி ரூபாயை இழந்தனர்.நேற்றைய தினம் மட்டும், மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ், 1,115 புள்ளிகள் சரிந்தது.

உலகளவிலான சந்தைகளில் குறுகிய காலத்தில் அதிக பங்குகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், அவற்றின் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் பிரதிபலித்தது.மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், நேற்றைய வர்த்தகத்தில், 1,114.82 புள்ளிகள் சரிந்து, 36,553.60 புள்ளிகளுக்கு கீழிறங்கியது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிப்டி, 326.30 புள்ளிகள் சரிவைக் கண்டு, வர்த்தகத்தின் முடிவில், 10,805.55 புள்ளிகளில் நிலை பெற்றது.சென்செக்ஸ் பிரிவில் ஹிந்துஸ்தான் யுனிலீவர் தவிர மீதி அனைத்து பங்குகளும் சரிவைச் சந்தித்தன.இதில் இண்டஸ்இண்ட் பேங்க் பங்குகள் அதிக விலை சரிவை சந்தித்தன. இந்நிறுவன பங்குகள் விலை, 7 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டன.

இதனையடுத்து, பஜாஜ் பைனான்ஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா, டெக் மகிந்திரா, டி.சி.எஸ்., டாடா ஸ்டீல் ஆகிய நிறுவன பங்குகள் அதிகளவில் விலை சரிந்தன. பொருளாதார மீட்சி குறித்த கவலைகள், மத்திய வங்கியின் புதிய நிதிஉதவிகள் இல்லாதது, ஆகியவை உலகளவில் அதிக பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. இதன் தாக்கம், இந்திய சந்தையிலும் பிரதிபலித்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)