பதிவு செய்த நாள்
01 அக்2020
21:07
புதுடில்லி:நாட்டின் பெட்ரோல் விற்பனை, கடந்த செப்டம்பர் மாதத்தில், 2 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
கடந்த மார்ச் இறுதியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின், முதன்முறையாக பெட்ரோல் விற்பனை அதிகரித்துள்ளது. பெட்ரோல் விற்பனை பழைய நிலைக்கு திரும்பி இருப்பினும், டீசல் விற்பனை இன்னும் திரும்பவில்லை. கடந்த செப்டம்பரில், பெட்ரோல் விற்பனை, கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது, 2 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய ஆகஸ்ட் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது, 10.5 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
டீசல் விற்பனையை பொறுத்தவரை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது, 7 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுஉள்ளது. இருப்பினும், கடந்த ஆகஸ்ட் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது, 22 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு செப்டம்பரில், பெட்ரோல் விற்பனை, 21.6 லட்சம் டன்னாக இருந்த நிலையில், கடந்த செப்டம்பரில், 22 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆகஸ்டில் இதுவே, 19 லட்சம் டன்னாக குறைந்திருந்தது.டீசலை பொறுத்தவரை, கடந்தாண்டு செப்டம்பரில், 52 லட்சம் டன்னாக இருந்த நிலையில், கடந்த செப்டம்பரில், 48.4 லட்சம் டன்னாக குறைந்துவிட்டது. கடந்த ஆகஸ்டில் இதுவே, 39.7 லட்சம் டன்னாக, மிகக் குறைவாக இருந்தது.பொருளாதார வளர்ச்சி மீட்சியை நோக்கி திரும்புவதால், எரிபொருள் விற்பனை விற்பனை அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|